Skip to main content

“நீட்டில் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு.. வெளிநாட்டில் வாய்ப்பு இருக்கிறது..” - கல்வி ஆலோசகர் சுபாஷ் சந்திர போஸ்

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

“We have been doing this service for 15 years..” - Educationist Subhash Chandra Bose

 

டிவைன் மெடிஸியஸ் சார்பில், ‘ஆல் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் ஜமைக்கா’வில் மருத்துவம் படிப்பதற்கான விளக்கக்கூட்டம் நடைபெற்றது. சென்னை விஜயா பார்க்கில் நடந்த இந்தக் கூட்டத்தில், மருத்துவர் ராம் கே. சலாஸ்னி சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். இதில், கல்வி ஆலோசகர் சுபாஷ் சந்திர போஸ் கலந்துகொண்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார். 


நிகழ்ச்சி முடிந்த நம்மிடம் பேசிய கல்வியாளர் சுபாஷ் சந்திர போஸ், “ஏறத்தாழ 15 வருடங்களாக வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு வசதிகள் செய்துவருகிறோம். உலகத் தரம் வாயந்த அமெரிக்க பாடத்திட்டத்துடன், அலோபதி விவரங்களுடனான மருத்துவப் படிப்பை இந்தக் கல்லூரியில் வழங்கிவருகின்றனர். ஐந்து வருட படிப்பு முடிந்தவுடன் அந்த நாட்டில் மாதம் மூன்று லட்சம் சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது. அமெரிக்காவில் மேல்படிப்புக்கும், அந்த நாட்டின் அனுமதியுடன் அங்கு பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்பு இங்கு உள்ளது. 


பொருள் ஈட்டுவதுமட்டுமின்றி நம் மாணவர்களின் நல்ல படிப்புக்காகவும் இந்தச் சேவை செய்துகொண்டிருக்கிறோம். கனடாவில் மருத்துவம் பயிற்சி பெற்றுவரும் மருத்துவர் இங்கு வந்திருந்தார். அதன் காரணமாக மாணவர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினோம்.


இன்று நீட் தேர்வு எழுதி வாய்ப்பு கிடைக்காதவர்கள் பங்கேற்றனர். அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையை நடத்திவருகிறோம். மாணவர்கள் மருத்துவம் படிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். மதிப்பெண் பெற்று பண வசதி இருந்தால் இந்தியாவில் படிக்கிறார்கள். அந்த வாய்ப்பு இல்லாதவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல இருந்தாலும், அவர்கள் வெளிநாடுகளில் எதிர்க்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் வேறு சில விஷயங்களைக் கண்டு தயங்குகிறார்கள். அதற்கெல்லாம் சிறப்பான வழிமுறைகளை உருவாக்கி அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி சிறந்த மருத்துவர்களாக வரவேற்கிறோம். 


இந்த நிகழ்ச்சிக்கே என்னிடம் மாணவர்களாக படித்த மூன்று மருத்துவர்கள், அவர்களின் உடன் பிறந்தவர்களுக்கான சேர்க்கைக்காக வந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.