Skip to main content

சிவன் அருள் பெற ஏழு வகையான அபிஷேகங்கள்!

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 To obtain the grace of Shiva; Seven types of Abhishek!

 

பக்தி, அன்பு, பாசம் என்பதெல்லாம் என்ன? இவையெல்லாம் ஒரு பொருளைக் குறிப்பதா? பொருள் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சரி; பொருள் என்றால் என்ன? அது வாங்கக்கூடிய பொருளல்ல. அது சகலத்தையும் செய்யும்; சகலத்திற்கும் உயிரூட்டும்; சகலத்தையும் அழிக்கும்; சகலத்தையும் காத்தருளும். அது தான் அண்ட பேரண்டத்தையும் மறைபொருளாக இருந்து ஆட்சிசெய்யும் பரம்பொருள். ஆம்; பரம்பொருளே பரமசிவம். நாம் சதா சிவம் என்றிருந்தால் அது "அன்பே சிவம்' என்பதை அறியவைக்கும். அதையறிய எது வேண்டும்? ஆரோக்கியம் வேண்டும். ஆரோக்கியம் பெற எது வேண்டும்? பக்தி செய்யவேண்டும். ஒரு கோவிலிலுள்ள மூலஸ்தானத்தில் மூலவருக்கு அபிஷேகம் நடக்கும்.

 

1.முதலிலில் தூய்மையான தண்ணீரில் கழுவி பின்னர் மஞ்சள் அபிஷேகம்,

2.வாசனைத் திரவிய அபிஷேகம்,

3.சந்தன அபிஷேகம்,

4.இளநீர் அபிஷேகம்,

5.விபூதி அபிஷேகம்,

6.பன்னீர் அபிஷேகம்,

7.சொர்ண அபிஷேகம்  

இவ்வாறான அபிஷேகங்களை வரிசையாக முடித்து வண்ண மலர்களால் அலங்கரித்து, அர்ச்சர்கள் சிவபெருமானை வழிபடுவார்கள். பக்தர்கள் மனமும் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து எல்லையில்லா ஆனந்தத்தில் திளைப்பர். இத்தகைய அபிஷேகத்தைப் பற்றி திருமந்திரச் சிற்பி திருமூலர்...

"எய்தி வழிப்படில் எய்தாதன இல்லை

எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும்

எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்

எய்தி வழிப்படில் எய்திடும் முக்தியே'

என்கிறார். அதாவது, வாச மலரிட்டு, வண்ணக் கலவைகள் சாற்றி, அமுதுபடைத்து, அன்பு கொண்டு தீபதூபம் காட்டி வழிபாடு செய்தால் அடைய முடியாதது ஒன்றுமில்லை. இந்த முறையில் நின்று வழிபாடு செய்பவர் இந்திரலோகச் செல்வம் அடையப் பெறுவர். அவர்களுக்கு எட்டுவகை சித்திகளும் கைகூடும். எல்லாவற்றிற்கும் மேலாக இம்முறையில் வழிபடுவோர் முக்தியின்பமும் சித்திக்கப் பெறுவர் என்கிறார்.

 

இப்படி அர்ச்சனை செய்வதும், அபிஷேகம் செய்வதும் மிக உயரிய விஷயமாகும். இதனால் மூலவரின் ஆதிமூலமான பரம்பொருள் ஆற்றல் பேரானந்தம் அடைகிறது. எவ்வித எதிர்பார்ப்புமில்லாத எம்பெருமான் ஈஸ்வரன் அடியார்களுக்கு அளவற்ற அருளாசியை வழங்கி ஆனந்தப் படுத்துகிறார். மூலவருக்கான அபிஷேக ஆராதனையை எப்படிச் செய்யலாம் என்பதை உடல் இயக்கவியலிலின் மேதை திருமூலர்-

"வரைத்து வலம்செய்யுமாறு இங்கு ஒன்றுண்டு

நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி

உரைத்து அவன்நாம் உணர வல்லார்க்குப்

புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே'

என்று பாடுகிறார். அதாவது விண்ணும் மண்ணும் அளக்க, எங்கும் விரிந்து பரந்து நிறைந்திருக்கிற பரம்பொருளை ஒன்றில் எழுந்தருளச் செய்து வழிபடும்முறை ஒன்று இங்குள்ளது. அதுவே சிவலிங்க வழிபாடாகும். பொங்கிப் பெருகிவரும் கங்கை நீரையும், வாசமலர்களையும் கைகளில் ஏந்தி, ஐந்தெழுத்து மந்திரத்தை (நமசிவய) ஓதி வழிபடவேண்டும். இப்படிப் பரம்பொருளை உள்ளத்தால் உணர்ந்து வழிபடுவோரின் உள்ளத்தைவிட்டு வள்ளல்பெருமான் வெளியே போகமாட்டான். அவர்களின் உள்ளத்திலேயே இருப்பான் என்று கூறுகிறார்.

 

எனவே இதுபோன்ற வழிபாடுகளால் சிவப்பரம்பொருளை நம் உள்ளத்தோடும், உணர்வோடும் ஒன்றியிருக்கச் செய்ய, இறைவன் அருளிய இவ்வுடலெனும் கூடு ஆரோக்கியமாக இருக்கவேண்டும். உடலின் சீரான இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிற அக, புற (உள், வெளி) உறுப்புகள் அனைத்தும் உறுதியாகவும், நல்லுணர்வோடும் இயங்கிட "ஆசன அபிஷேகம்' செய்யவேண்டும். உடலில் உச்சிமுதல் பாதம்வரையுள்ள உறுப்புகளில் மூளையானது திறம்பட செயல்படவேண்டும். அதற்கு மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) அவசியம். அதேபோல மூளையானது அபரிமிதமான செயல்திறனோடும், அளப்பரிய நினைவாற்றலோடும் செயல்பட நாம் "பர்வதாசனம்' பழகவேண்டும். இப்பயிற்சியானது தலைப்பகுதியிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகும். ஆசனங்களின் அரசன் என்று சொல்லப்படும் சிரசாசனத்திற்கு நிகரானதாகும். அடுத்தது "தாடாசனம்' பழகவேண்டும். இது ரத்த அழுத்தத்தைப் போக்கி இதய செயல்பாட்டை சமன்படுத்துகிறது. அடுத்து "தாளாசனம்' பழகவேண்டும். இது தோள் மூட்டுகளுக்கும், விலா எலும்புகளுக்குமான ஆசனமாகும். இது நீரிழிவைத் தடுக்கிறது.

 

பின்பு "விருக்ஷாசனம்' பழகவேண்டும். இது இடுப்பெலும்பு, முழங்கால் மூட்டுகள், கணுக்கால் மூட்டுகளுக்கு மிகுந்த வலிமையையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. அடுத்து "பரிவர்த்தன திரிகோணாசனம்' பழகவேண்டும். இது நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் ஆசனமாகும். வலிப்பு நோய் தடுக்கப்படுகிறது. அடுத்தது "உத்தானாசனம்', "யோக முத்ரா, "பஸ்சிமோத்தாசனம்' பழகவேண்டும்.

 

இவ்வகை ஆசனங்கள், ஒருங்கிணைந்த சக்கரங்களின் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை அபரிமிதமாகத் தூண்டி ஆரோக்கியமான உடலியக்கத்திற்குத் துணைபுரிகின்றன. எனவே இதுபோன்று நாம் செய்யும் ஒவ்வொரு ஆசனமும் உடலுறுப்புகளின் செயல்பாட்டிற்கும், உடலுறுதிக்கும், மனஉறுதிக்கும், மன அமைதிக்கும் உதவிகரமாக இருக்கின்றன. இவ்வாறு நாம் செய்யும் ஆசனங்களெல்லாம் நம் உடலின் உள், வெளி உறுப்புகளுக்குச் செய்யும் அபிஷேகமாகும். அது வெறும் அபிஷேக மல்ல; உன்னதமான யோகாபிஷேகமாகும். அதன் விளைவாக இறைவன் சிவபெருமானின் உன்னத நிலையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளமுடியும். சரியை, கிரியை, யோகம் என்று வகைப்படுத்துகிறார் திருமூலர். சரியை என்பது உருவத்தைப் பார்த்து வழிபடுவது; கிரியை என்பது உருவத்தை அலங்கரித்து வழிபடுவது என்று பொருளாகும். இந்த இரண்டு செயல்களால் நமது உடலெனும் கூட்டிற்கு "வீடுபேறு' கிடைக்காது. எனவே நாம் ஒவ்வொருவரும் யோகம் எனும் "யோகாபிஷேகம்' செய்வோம்.வீடுபேற்றைப் பற்றி சங்க காலப் புலவர் ஔவையார்-

"பற்றற்று நின்ற பரம்பொருளை சிந்திக்கில்

முற்றும் அழியாது உடம்பு'

என்கிறார்.

 

விருப்பு, வெறுப்பு இல்லாதிருக்கிற இறைவனை மனதில் உள்ளன்போடு இருத்தித் தியானம் (யோகத்தில் அடங்கியதே) செய்தல் வேண்டும். அப்படிச் செய்பவர்களின் உடல் அழியவே அழியாது. இவ்வாறாக ஒருவரின் மனமானது சதாசிவம் எனும் சிவலிங்க வழிபாட்டில் ஈடுபடவேண்டுமெனில், நாம் ஒவ்வொருவரும் யோகாபிஷேகம் செய்வோம். யோகத் தந்தையும், தாயுமானவருமான சிவபெருமானின் அன்பைப் பெற்று, ஆரோக்கிய ஆனந்த வாழ்வைப் பெறுவோம்.

 

- யோகி சிவானந்தம்

 

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.