Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு ஒத்திவைப்பு

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

உலகளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தொட்டுள்ளது. உலகளவில் 17,138 என தற்போது இறப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 3,91947 எனவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,026843 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

 Tokyo Olympic Games adjourned for one year


இந்நிலையில் காரோனாவின் தாக்கம் தற்போது உலக அளவில் அதிகரித்துள்ளதால் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா  வைரஸ் தாக்குதல் காரணமாக டோக்கியோ  ஒலிம்பிக் போட்டிகள் குறிப்பிட்ட காலத்தில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்து வந்த நிலையில், தற்போது டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது என்ற ஜப்பானின் பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ஏற்றுக்கொண்டதை அடுத்து  தற்போது ஓராண்டுக்கு ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்