Published on 02/04/2019 | Edited on 02/04/2019
சவுதியை சேர்ந்த பத்திரிகையாளர் கசோகி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.
![saudi arabia gives home and monthly cash for expenses to children of journalist khashoggi](http://image.nakkheeran.in/cdn/farfuture/F0ljvIlYE0XEhFKDFLnzxUIaiDkwUnGwpRGt-JakD6c/1554202682/sites/default/files/inline-images/kashoki-std.jpg)
பல்வேறு திருப்பங்களை சந்தித்த இந்த கொலை வழக்கில் சவுதியிலிருந்து வந்த ஏஜெண்டுகள் 15 பேர் தான் கசோகியை கொன்றனர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கசோகியின் முதல் மனைவியின் வாரிசுகளான அவரது 2 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆகியோருக்கு சவுதி அரசு சார்பில் நீண்டகால அடிப்படையில் சொத்துகள் மற்றும் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அதன்படி சவுதியின் ஜெட்டா நகரில் 4 பேருக்கும் வீடுகளும் மாதம் தோறும் 7 லட்சம் முதல் அவர்கள் கேட்கும் தொகையை தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றும் இந்திய மதிப்பில் 27 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.