Skip to main content

ஆஸ்கர் விருதினைத் திருடியவர் கைது! - முகநூல் வீடியோவால் பிடிபட்டார்!!

Published on 06/03/2018 | Edited on 06/03/2018

ஆஸ்கார் விருதினைத் திருடிவிட்டு, அதுகுறித்து முகநூல் வீடியோவில் பெருமையாக பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

MC

 

90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினை திரீ பில்போர்ட்ஸ் படத்திற்காக ஃப்ரான்ஸ் மெக்டோர்மண்டுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது அன்று மாலையே திருடுபோனதாக அழுத முகத்தோடு அங்கிருந்தவர்களிடம் புகாரளித்திருக்கிறார் மெக்டோர்மண்ட். 

 

அதேநாளில் இரவு டெர்ரி பிரையண்ட் தனது முகநூல் பக்கத்தில், இசை மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தனது குழுவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டு, ஆஸ்கர் விருதையும் காட்டியிருக்கிறார். அது திருடப்பட்ட விருது என்பது தெரியாத பலரும், அவருக்கு வாழ்த்தியிருக்கின்றனர்.

 

 

 

 

இதனைக் கவனித்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் அருகிலிருந்த காவல்துறையினர் உதவியுடன் பிரையண்டைப் பிடித்துள்ளனர். விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு முறை கூட பிரையண்ட் மேடையேறாததால் அவர்மீது சந்தேகம் எழுந்தது; அதனால், அவரைப் பின்தொடர்ந்தேன் என அந்த புகைப்படக் கலைஞர் தெரிவித்திருக்கிறார்.

 

பிரையண்ட் கைது செய்யப்பட்டு, தற்போது 20ஆயிரம் டாலர் பிணையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். திருடப்பட்ட ஆஸ்கர் விருதினை மெக்டோர்மண்ட் மீண்டும் கண்ணீர் மழ்க பெற்றுக்கொண்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்து உரையாடிய பிரதமர்!

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

pm modi  met the pomman Belli couple

 

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பின் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர். 

 

அதன்பிறகு மைசூர் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, இன்று காலை பந்திப்பூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிறகு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வந்தார். பின்னர் யானைகளுக்கு கரும்புகளை வழங்கி மகிழ்ந்ததோடு யானைகளின் பாகன்களை சந்தித்து உரையாடினார். பின்பு இங்கு வர முக்கியக் காரணமாக இருந்த ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள பாகன்கள் பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்து பாராட்டி அவர்களிடம் உரையாடிவிட்டு சாலை மார்க்கமாக தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு காரில் சென்று பின்பு அங்கிருந்து தனி விமானம் மூலம் மைசூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

 

 

Next Story

பொம்மன் பெள்ளியை நேரில் சந்திக்கும் மோடி; புதுப்பொலிவு பெரும் தெப்பக்காடு

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். குறிப்பாக சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் தாம்பரம்-செங்கோட்டை ரயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைக்க இருக்கிறார்.

 

அதனைத் தொடர்ந்து 8 ஆம் தேதி முதுமலை தெப்பக்காடு பகுதிக்குச் செல்ல இருக்கிறார். இதனால் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி செல்லும் பிரதமர்  'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியை நேரில் சந்திப்பதோடு ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகளையும் நேரில் பார்வையிட இருக்கிறார்.

 

மைசூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9 மணிக்கு மசினகுடிக்கு வருகை தரும் பிரதமர், சாலை மார்க்கமாக தெப்பக்காடு செல்கிறார். இதனால் அந்த பகுதியில் நாளை முதல் வரும் 9 ஆம் தேதி வரை ரிசர்ட்டுகள், உணவு விடுதிகள், சிற்றுண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகை காரணமாக அங்கிருக்கும் அரசு அலுவலகங்கள் வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வன விலங்குகளை காண்பதற்கான வாகன சவாரியும் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், துப்புரவு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.