Skip to main content

லக்ஷ்மி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டல் மோசடி புகாரில் கைது...

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

லண்டனில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரரான லக்ஷ்மி மிட்டலின் சகோதரரான பிரமோத் மிட்டல் ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

lakshmi mital's brother pramod mital arrested in europe

 

 

பிரமோத் மிட்டல் ஐரோப்பாவின் போஸ்னியா நாட்டில் நிலக்கரி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் பண மோசடி நடந்துள்ளதாகவும், அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி பிரமோத் மிட்டல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ப்ரோமோத மிட்டல் மட்டுமின்றி அந்தத் தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் நிர்வாகி ஒருவர் என மொத்தம் மூன்று பேரை போஸ்னியா போலீஸார் கைது செய்துள்ளனர்.  மேலும் ஒருவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்