Published on 10/12/2018 | Edited on 10/12/2018

கடல் வழியாக கப்பல் மூலம் உலகை சுற்றி வரும் போட்டியில் பங்கேற்ற இங்கிலாந்தை சேர்ந்த சூசி என்ற 29 வயது பெண்ணின் கப்பல் பனிப்பாறையில் மோதி சேதமடைந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பசிபிக் பெருங்கடலின் மத்தியில் சிக்கி தத்தளித்துள்ளார். இந்நிலையில் அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் ஊழியர்கள் அவரை மீட்டு காப்பாற்றியுள்ளனர். 50 மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட அந்த பெண் கடல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான முதலுதவி சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் கப்பல் மூலம் கரைக்கு கொண்டுவரப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.