மலேரியா பாதிப்புகளால் உயிரிழக்கும் இந்தியர்கள்! - அதிர்ச்சித் தகவல்
தெற்காசிய நாடுகளில் மலேரியா பாதிப்புகளால் அதிக உயிரிழப்புகளைச் சந்திக்கும் நாடுகளில் இந்தியா முதல் இடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மலேரிய பாதிப்புகள் குறித்த ஆய்வினை சர்வதேச அளவில் மேற்கொண்டது. அதில், தெற்காசிய நாடுகளில் மலேரிய பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இந்திய முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு 331 பேர் மலேரியாவினால் உயிரிழந்துள்ளனர். மலேரியாவை முறையாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் இந்தியர்கள் பின்தங்கியுள்ளனர் என தெரிவித்திருந்தது.
இதை மறுத்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா, இந்தியா மலேரியா ஒழிப்பில் முன்னேறி வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது என தெரிவித்திருந்தார்.
உலக அளவில் அதிகளவிலான மலேரியா பாதிப்புள்ள நாடுகளில் நைஜீரியா முதல் இடத்தையும், காங்கோ இரண்டாவது இடத்தையும் பெற்றிருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.