Published on 24/10/2020 | Edited on 24/10/2020

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை நான்கு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வேகமாக பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. உலகளவில் 4.25 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3.14 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.50 லட்சமாக இருக்கிறது. பல நாட்டு அரசியல் தலைவர்களும் இந்த கரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டூடாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.