Skip to main content

அமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில் டிசம்பர் 08, 2018, சனிக்கிழமையன்று நண்பகல் 12:30 மணி முதல் நடைபெற்ற "மகாகவி பாரதியாரின்" 137வது பிறந்தநாளில் டெலவர், பென்சிலவேனியா மற்றும் நியூ செர்சியை சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

 

bb

 

 

செல்வி. கண்மணி துரைக்கண்ணன் விழாவினை ஒருங்கிணைக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. திருமிகு.மெர்லின் தீபன் வரவேற்புரை வழங்கினார். 

 

தொடர்ந்து சிறுவர்களுக்கான ஓவியப்போட்டி இருபிரிவாக நடைபெற்றது. 7 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், 8 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் கலந்துகொண்டு பாரதியாரின் படத்தை வரைந்து வந்திருந்த மக்களை வியப்பிற்குள்ளாக்கினர். 7 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டியில் ஜெசிகா ரேபன் முதலிடத்தையும், திரிபுவன் இரண்டாம் இடத்தையும், அகஷத் பிரம் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.  7 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டியில் சுபிக்ஷா ஶ்ரீநிவாசன் வித்யா முதலிடத்தையும், அறிவாற்றல் இராஜ்குமார் இரண்டாம் இடத்தையும், கெளதம் ராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

 

 

bb

 

 

சிறுவர்களுக்கான வினாடி வினா போட்டியை திருமிகு. ராஜ்குமார் கலியபெருமாள் இனிமையாக நடத்தினார். குழுவிற்கு பாரதியார் பணியாற்றிய சுதேசிமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா மற்றும் சூரியோதயம் என்ற இதழ்களின் பெயர்கள் சூட்டப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. நான்கு குழுவினர் கலந்துகொண்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி நடுவர்களையே கலங்கடித்தனர். 5 சுற்றில் முடியவேண்டிய போட்டி 29வது சுற்றிலும் நிறைவடையாமல் முதல் இடத்திற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் முதல் பரிசை சக்கரவர்த்தினி அணியை சேர்ந்த பிரத்யூஷ் மற்றும் இந்தியா அணியை சேர்ந்த யதுராஜ் சுந்தர்ராஜ் மற்றும் செல்வன். வேணு தனபால் பகிர்ந்து கொண்டனர். மூன்றாம் இடத்தை அறிவாற்றல் மற்றும் ஆதித் வென்றனர்.

 

விழாக்குழுவில் ஒருவரான திருமிகு.பிரசாத் பாண்டியன் தரவுகள் மற்றும் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் வினாடி வினாவின் கேள்விகள் தயாரிக்க விழாக்குழு எடுத்த முயற்சியை எடுத்துக் கூறினார்.

 

பின்னர் பெரியவர்களுக்காக நடந்த பேச்சுப்போட்டியில் பலர் கலந்து கொண்டு "பாரதியாரின் சிந்தனைகளை" பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினார்கள். விழாவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிக்கு திருமிகு.அகத்தியன் ஜான் பெனடிக்ட் மற்றும் முனைவர். வாசு அரங்கநாதன்  இருவரும் நடுவர்களாக இருந்து விழாவை சிறப்பித்துக் கொடுத்தனர்.  அதில் முதல் பரிசைத் தட்டிச்சென்றார் திருமிகு. ரம்யா கார்த்திகேயன்.  திருமிகு. விஜயலட்சுமி ராமசுப்பிரமணியம் மற்றும் திருமிகு. தேவனாதன் தனபால் அருமையாகப் பேசி இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை தட்டிச்சென்றனர்.

 

அதன் பிறகு திருமிகு. தீபன் அவர்கள் பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி பற்றி அழகான கவிதையை பாடிச் சிறப்பித்தார்.

 

திருமிகு. பிரசாத் அவர்கள், பாரதியார் பற்றி அறியாத பல நுண்ணிய தகவல்களை அரங்கத்தில் எடுத்துரைத்து வந்தோரை வியப்பில் ஆழ்த்தினார்.

 

விழாவில் சிறப்பு விருந்தினரில் ஒருவரான திரு.வாசு அரங்கநாதன், “பாரதியார் கவிதைகளின் உலகளாவிய ஈர்ப்பு” என்ற தலைப்பில் மிக அருகையாக பல தகவல்களைக் கூறினார்.


 
விழாவின் மற்றொரு சிறப்பு விருந்தினரான திருமிகு. அகத்தியன் ஜான் பெனடிக்ட், “பாரதியார் - நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா” என்ற தலைப்பில் பாரதியாரின் விடுதலை எழுச்சி பாடல்கள், தமிழ் பாடல்களின் கருத்துகளை கவிதையுடன் சேர்ந்து பேசி பாரதியாரின் புகழை போற்றினார்.

 

 

bb

 

 

விழாக்குழுவில் ஒருவரான  திரு.துரைக்கண்ணன் நன்றியுரை வழங்கினார்.
விழா முடிவில் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.