Skip to main content

பிரசவத்திற்காக வீட்டுக்கு சென்ற மனைவி... மூன்று பெண்களை திருமணம் முடித்த கணவன்..!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

Three marriages that took place during the period of exile ... Husband who threatened his wife with girlfriends

 

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிங்காரன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். அதே பின்னலாடை நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகரைச் சேர்ந்த கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் பணிபுரிந்துவந்தார். இங்குப் பணிபுரிந்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் முடித்துள்ளனர். திருமணம் முடிந்து இருவரும் திருப்பூரிலேயே வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், கீதா இரண்டாவது முறையாக கருவுற்றார். இதையடுத்து, பிரசவத்திற்காக கீதாவை தர்மபுரிக்கு அனுப்பியுள்ளார் சிங்காரன்.

 

குழந்தை பிறந்தபின்பு தர்மபுரியிலிருந்து திருப்பூர் திரும்பிய கீதா, தனது கணவரின் செயலைக் கண்டு அதிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது கணவரை திருந்துமாறு அறிவுறுத்தியும் அவர் மாறாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘எனது இரண்டாவது பிரசவத்திற்காக தர்மபுரி அனுப்பிய எனது கணவர், சில ஆண்டுகள் கழித்தும் என்னை திருப்பூருக்கு அழைக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்தைவிட்டு வேறு நிறுவனத்திற்குச் சென்றுள்ளார். அங்கு தனது வேலையைத் தொடர்ந்துவந்த எனது கணவர், சில நாட்களில் அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணை திருமணம்செய்துள்ளார். சில நாட்களில் அந்தப் பெண் மரணித்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

 

மேலும், அதோடு நிறுத்திக்கொள்ளாமல் நான்காவதாக மதுரையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். பிரசவத்திற்கு அனுப்பிய என்னை அவர் மறந்த நிலையில் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுவந்துள்ளார். மேலும் சிங்காரம், அப்பெண்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளாதபடி தனித்தனியாக வாடகை வீட்டில் குடியமர்த்தி வாழ்ந்துவந்துள்ளார். அவர் சாதுர்யமாக செயல்பட்டு இவற்றை எல்லாம் மறைத்துவந்த நிலையில், நான் திருப்பூருக்குத் திடீரென வந்ததும் இவை அனைத்தும் அம்பலமானது. அவரை நான் கண்டிக்கும்போதெல்லம் திமிராக பேசியதோடு மட்டுமில்லாமல், மற்ற காதலிகளையும் வைத்து என்னை மிரட்டினார்’ என கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் மாற்றம்; தொண்டர்கள் கொண்டாட்டம்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Dharmapuri pmk candidate change Celebration of volunteers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று (21.03.2024) வெளியானது. அதில் பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - அரசாங்கம், விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ் அறிவிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் அறக்கட்டளையின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரியில் பா.ம.க.வினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.