Skip to main content

எந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்துள்ளீர்கள்?- எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் சரமாரி கேள்வி! 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

Which case have you handed over to the CBI?

 

தமிழக சட்டப்பேரவையில் இன்று (09/05/2022) பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக ஒளிபரப்ப வேண்டும். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டது. யார் முதலமைச்சராக இருந்தாலும் காவல்துறை தரும் அறிக்கையையே படித்து வருகிறோம். விக்னேஷ், தங்கமணி மரண வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கோரினார். 

 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சட்டமன்றத்தின் கேள்வி நேரம் முழுமையாக ஒளிபரப்பப்படுகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்? விசாரணை கைதிகள் தங்கமணி, விக்னேஷ் மரண வழக்குகளை அரசு எதையும் மறைக்கவில்லை. இந்த அரசு அப்படி இருக்காது, யார் தவறு செய்தாலும் கட்டாயம் தண்டனை பெற்று தரப்படும். மீண்டும் சொல்கிறேன், சாத்தான்குளம் சம்பவம் போல் இது விசாரிக்கப்படாது, முறையாக விசாரிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த லாக்-அப் மரணங்களில் எந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்துள்ளீர்கள்?

 

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி சம்பவம் போல் அல்லாமல் பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கும் அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது. மயிலாப்பூர் முதிய தம்பதி கொலை ஆதாயத்திற்காக என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மயிலாப்பூரில் முதிய தம்பதி கொலை வழக்கில் சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை ஆறு மணி நேரத்தில் கைது செய்த சென்னை காவல்துறைக்கு எனது பாராட்டுகள்" எனத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.