Skip to main content

நள்ளிரவில் வீடு புகுந்து இழுத்துச்சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் எங்கே?

Published on 27/05/2018 | Edited on 27/05/2018
ar


உசிலை 1.கோட்டையன்  வ / 40 , த / பெ சின்னன், கோவில்பட்டி 2.சரவணன் வ , 32 த / பெ பண்டாரம் ,   ஆலங்குளம் – பாப்பாக்குடி காவல் நிலையம் 3.முருகன் வ / 40, த /  பெ செல்லத்துரை,  திருநெல்வேலி காவல் நிலையம் 4.கலியலூர் ரஹ்மான் வ / 50, த / பெ கலீல், 5.முகமது அனஸ் வ/ 20 , த / பெ கலியலூர் ரஹ்மான் 6. முகமது இர்ஷத்  வ /18 , த / பெ கலியலூர் ரஹ்மான் ஆகியோரை 25-ந்தேதி நள்ளிரவில் வீடு புகுந்து போலீசு இழுத்துச் சென்றது. கைது செய்யும் போலீசார் எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் என்பதையோ, என்ன வழக்கிற்காக கைது செய்கிறார்கள் என்பதையோ, எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதையோ குடும்பத்தினருக்கு தெரிவிக்கவோ இல்லை. 

 

உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரித்த போது தமக்கு ஏதும் தெரியாது என்று கை விரிக்கின்றனர். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் கொத்து கொத்தாக மக்களை கொன்று, வன்முறை தீ வைப்பை நடத்திவிட்டு தங்களது குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்கு எமது அமைப்புக்கு எதிராக பொய்களையும், புனை சுருட்டுக்களையும் உளவுத்துறை பரப்பி வருகிறது. 

 

கைது செய்யப்பட்டால் முறையாக தகவல் தெரிவிக்க  வேண்டும் என்பதும் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதும் சட்ட நடமுறையாகும். கடந்த 48 மணி நேரமாக இவர்களை காணவில்லை என்பதால் இந்த தோழர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம். தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஆதரிக்கின்ற அனைவரும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கும், எமது தோழர்களுக்கும் எதிராக போலீசு தொடுத்திருக்கும் இந்த தாக்குதலுக்கு எதிராகவும், இவர்களை விடுவிக்க கோரியும்  குரல்கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த 6 தோழர்களின் கடத்தலுக்கு எதிராக நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.