Skip to main content

தேசிய நெடுஞ்சாலைகளில் வெட்டப்படும் மரங்கள்! நீதிபதிகள் கண்டிப்பு

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
hc


தேசிய நெடுஞ்சாலைகளில் 4 வழிச்சாலைக்காக எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால் ஒரு மரம் வெட்டினால், 4 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.  ஆனால் இதை தேசிய நெடுஞ்சாலை முறையாக பின்பற்ற வில்லை. நாங்களே நேரில் பார்த்து இருக்கிறோம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

 

மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரம் உள்ள மரங்களை வெட்ட இடைகால தடைவிதிக்க கோரிய வழக்கில் சாலை விரிவாக்கத்திற்காக,  ஒப்பத்த படி குறிப்பிட்ட மரங்களை மட்டும் தான் வெட்டுவோம் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 29 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த தமிழரசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்  " NH 785 மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.   இந்த சாலையின் இருபுறமும் மரங்கள் நிறைந்து பசுமையாக காணப்படும். இந்த சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.   இதில் ஒரு பகுதியாக மதுரை  பாண்டியன் ஹோட்டலில் இருந்து புதிய மேம்பாலம் அமைக்கபட உள்ளது.  இதற்காக மதுரை - நத்தம் சாலையில் 50 முதல் 100 ஆண்டுகள் வரை பழமையான மரங்கள் வெட்டபடுகிறது.    மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை அதிகளவில் போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை. எனவே இந்த சாலையில் விரிவாக்க பணிகள் தேவையற்றது. சாலை விரிவாக்க பணியால் பழங்கள் தரகூடிய மரங்கள், மருத்துவ குணம் நிறைந்த மரங்கள் தினசரி வெட்டி சாய்க்கப்படுகிறது. 

 

100 ஆண்டுகள் பழமையான மரங்கள் இப்பகுதியில் இருப்பதால் சுற்றுசூழல் பாதிப்பு இல்லாமல் உள்ளது.  மரங்களை வெட்டுவதால் சுற்றுசூழல் கடுமையான பாதிக்கபடும். மேலும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் பலஇடங்களில் சாலை விரிவாக்க பணிகளின் போது மரங்களை வெட்டாமல் பாதிக்கபடும் மரங்களை மாற்று இடங்களில் நட்டு வைத்துள்ளனர்.  இதனால் மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது. வேறு இடத்தில் நடபட்ட மரங்கள் மீண்டும் இயற்கையாக வளர தொடங்குகின்றன. மரங்களை மாற்று இடங்களில் நடவு செய்ய பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துள்ள நிலையில் மரங்களை வெட்டி வருவதால் சுற்றுசூழல் பாதிப்படையும்.  எனவே மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்ட இடைகால தடைவிதிக்க வேண்டும். மேலும் மரங்களை வெட்டாமல் மாற்று இடங்களில் வைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு ஏற்கனவே நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை செயலர், தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை விடுமுறைகால நீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.


இந்த வழக்கு இன்று விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள்  சுந்தர்,  முரளிதரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில் மரங்களை வெட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரினர். மேலும் விரிவாக்கம் என்ற பெயரில், அனைத்து மரங்களையும் வெட்டுகின்றனர் என கூறினர்.

 

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள்,  தேசிய நெடுஞ்சாலைகளில் 4 வழிச்சாலைக்காக எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால் ஒரு மரம் வெட்டினால் 4 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இதை தேசிய நெடுஞ்சாலை முறையாக பின்பற்ற வில்லை . நாங்களே நேரில் பார்த்து இருக்கிறோம் என கூறிய நீதிபதிகள்,  சாலை விரிவாக்கத்திற்காக,  ஒப்பந்த படி குறிப்பிட்ட மரங்களை மட்டும் தான் வெட்டுவோம் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 29 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.