Skip to main content

"ஓட்டுக்கு பணம் தந்தால் ரூபாய் 5 லட்சமாக கேளுங்கள்"- கமல்ஹாசன் பேச்சு...

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

virudhunagar district makkal needhi maiam kamal haasan speech

 

2021- ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரப்புரையைத் தொடங்கியுள்ளார். 

 

அதன் தொடர்ச்சியாக இன்று (15/12/2020) விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய கமல்ஹாசன், "ஓட்டுக்கு ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தால் வாங்காமல் ரூபாய் 5 லட்சமாகக் கேளுங்கள்; நான் பணம் தர மாட்டேன். மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழகம் தக்க பாடம் புகட்டும்" என்றார். மேலும், “மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எங்கள் சொத்து; அவர் மடியில் அமர்ந்தவன் நான்” எனத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்