Skip to main content

“ உதவாத காப்பீடு..! சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..!!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம்-2016-ன் படி ஒவ்வொரு போலீஸ்காரரும் அதிகபட்சம் ரூ.7.50 லட்சம் அளவுக்கு மருத்துவ சிகிச்சை பெறலாம் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால், உண்மை நிலவரம் என்ன வென்றால், போலீஸ்காரர்கள் பலர் இந்த திட்டத்தால் பயனில்லை என்கின்றனர்.

 

police

 

“புற்றுநோய், தீக்காயம், எழும்புமுறிவு போன்ற சிகிச்சைகளுக்கும், கல்லீரல், சிறுநீரகம், இதயம், எலும்பு மஜ்ஜை போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் இந்த திட்டத்தின்படி, பயன்பெறலாம் என்கின்றனர். ஆனால், காப்பீடு அட்டையை எடுத்துக் கொண்டு சென்றால், விரட்டியடிக்காத குறையாக வெளியேற்றி விடுகின்றன தனியார் மருத்துவமனைகள்” என்று நம்மிடம் வேதனையை வெளிப்படுத்தினார் அந்த காக்கி நண்பர்.

 

 

அப்படியெனில் இந்த திட்டத்தால் பயன்பெற்றவர்கள் யாருமே இல்லையா? என்ற கேள்வியோடு சில போலீஸ் நண்பர்களிடம் விசாரித்தோம். அதற்கு அவர்கள் அளித்த பதிலோ, “காப்பீடு திட்டம் எல்லாம் வேஸ்ட், எனக்கு தெரிஞ்ச நண்பர் எங்க பக்கத்து ஸ்டேஷன்ல வேலை பார்த்தார். பெயர்  வெங்கடேசன், புற்றுநோய் பாதிப்பால் இங்குள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்றார். இன்ஸ்யூரன்ஸ் கவர் ஆகாதுன்னுட்டாங்க. இப்ப வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பல மாதங்களாக லீவ்ல இருக்கிறதால் இப்ப பாதி சம்பளம் தான் அவருக்கு கிடைக்கும். அதனால் நாங்களே பணம் வசூலித்து அவரது மருத்துவ செலவுக்காக ரூ.3,06,300 எங்க டி.சி அரவிந்தன் (இப்போது பூக்கடை டி.சி. அப்போது தி.நகர் டி.சி)மூலமாக அவருக்கு கொடுத்தோம்” என்றார்.

 

 

“காப்பீடு திட்டத்திற்காக ஒவ்வொரு போலீஸ்காரரிடம் இருந்து மாதம் ரூ.170 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடிவரை காப்பீட்டு நிறுவனங்களுக்கு செல்கிறது. ஆனால், அதனால் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. இப்ப இருக்கிற நிலைமையில லீவு கிடைக்கிறதே பெரியவிசயம். அதனால், ஏதாவது உடம்புக்கு சரியில்லைன்னா கூட ஆஸ்பத்திரிக்கு போக டயம் கிடைக்காது. அப்படியே போனாலும், உங்களுக்கு இந்த வியாதிக்கு இன்ஷ்யூரன்ஸ் கவர் ஆகாதுன்னு சொல்லிடுவான். அதனால சொந்த பணத்தை செலவு பண்ணியே வைத்தியம் பார்த்திக்கிடுவோம்” என்றார் மற்றொரு காக்கி நண்பர்.


இதுதொடர்பாக யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினோம். “தகுதியுள்ள அனைவருக்கும் காப்பீடு எங்கள் நிறுவனம் மூலம் வழங்குகிறோம்” என்ற ஒற்றை வரியில் முடித்துக் கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் 4 இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Rs 9 lakh confiscated at 4 places in Trichy

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.