Skip to main content

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது 

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Two arrested for selling banned lottery tickets

 

திருச்சி மாவட்டம், சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

 

சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வருவதாக சமயபுரம் போலீசருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் கடைவீதி பகுதியில் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆனந்த், இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான கார்த்திக் ஆகியோர் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த சமயபுரம் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்