Skip to main content

திருச்சியில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

trichy celebrated in hanuman jayanthi function

 

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

 

அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து  மகா தீபாராதனை நடைபெற்றது.

 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் தக்கார் சுந்தரி மற்றும் செயல் அலுவலர் சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்