Skip to main content

தொடர்கதையாகிவரும் தண்ணீரில் நீந்தி இறுதி ஊர்வலம் செல்லும் அவலம்!!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

 

இந்தியா சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டை தொட்ட நிலையிலும் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் பாதைகளைக்கூட அமைத்துக்கொடுக்காத அரசாகவே தமிழக அரசு இருந்துவருகிறது.

 

மயானத்துக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாமல்  ஆற்று நீரில் இறங்கி,  இறந்தவர்களின் உடலை சுமந்து சென்று  இறுதிச் சடங்குகள் செய்துவரும் சம்பவம் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இறப்பு நேரிடும் நேரங்களில் மட்டும் அரசும், அரசு அதிகாரிகளும் செய்துக்கொடுக்கிறோம் என்கிற சப்பைகட்டு காரணத்தைக்கூறி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை களைத்துவிடுகின்றதே தவிர செய்துகொடுக்க மறுக்கிறது என்பது தான் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்பவர்களின் கவலையாக இருக்கிறது.

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குமாரமங்கலம், வடக்குவேளி கிராமங்களில் இறந்தவர்களின் உடலை கொண்டுசெல்ல பாலம் இல்லோமல் போனதால் இழுத்து செல்லும் ஆற்று தண்ணீரில் நீந்தியபடியே இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் அவலம் தொடர்ந்து நடக்கிறது. அதேபோல கொற்றவநல்லூரிலும், நாகப்பட்டினத்திலும் அதே அவலம் தொடர்கிறது. அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியிலும் தொடர்கிறது. 

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள மேலப்பூவனூர், வெள்ளாம்பூவனூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களது உடலை தகனம் செய்ய, கொண்டியாற்றில் இறங்கி மயானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியநிலைதான் நீடிக்கிறது. மாற்றுப்பாதை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில்  இருந்தாலும் அந்த பகுதியில் கோயில் இருப்பதால், இறந்தவர்களின் உடலை அந்த பாதையின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்கிற எழுதப்படாத விதியாக இருக்கிறது, அதனால் கொண்டியாறு வழியாகத்தான் எடுத்துச் செல்லவேண்டியுள்ளது.

 

இந்த நிலையில், மேலப்பூவனூரைச் சேர்ந்த அமிர்தவள்ளி என்பவர் உயிரிழந்தார்.  அவரது உடலை  சுமந்தபடி கொண்டியாற்றில் இறங்கி மயானத்துக்கு கொண்டு சென்று, இறுதிச்சடங்குகள் செய்தனர்.

 

"இந்த இடர்பாடுகளை தவிர்க்க ஆறுகளின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது பாலம் கட்டினால்  இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு மட்டுமன்றி, அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் அப்பாவி பொதுமக்கள்.

 

எத்தனையோ தேவையில்லாத இடங்களில் கட்டிடம் கட்டுகிறோம் என்கிற பெயரில் அரசு பணத்தை சுருட்டுகின்றனர் ஆளும் அரசியல்வாதிகள், அதில் ஒன்றாக இப்படி பட்ட கிராமங்களில் பாலம் அமைத்துக்கொடுத்தால், இறந்தவர்கள் போகும் போதாவது அவதியில்லாமல் போவார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

தன் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக சிறுவனை கொன்ற தாய்!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

ரதக

 

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

Next Story

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பூசாரி... சோகத்தில் கிராமத்தினர்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

3

 

தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து கனமழை பொழிந்து வருகிறது. பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடும் அளவுக்கு மழையின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 

 

திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பாலங்களில் காட்டாற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. துறையூர் அருகே சேனப்ப நல்லூர் கிராமத்தில் உள்ள கோவில் பூசாரி அரிராஜ் (40). கோவில் நடையைச் சாற்றி விட்டு வீடு திரும்பிய போது ஆற்றைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகக் காட்டாற்று வெள்ளம் அவரை இழுத்துச் சென்றுள்ளது. துறையூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை மீட்புக்குழுவினர் அரிராஜை தேடிய பொழுது இறந்த நிலையில் இருந்த அவரது உடலைச் சடலமாக மீட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.