Published on 27/08/2018 | Edited on 27/08/2018

தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திற்கு 2018 - 2020 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் 25.08.2018ல் கோவையில் நடந்தது.
இதில் மாநில தலைவராக தற்போது குன்றத்தூர் சார் பதிவாளராக பணியாற்றும் முனைவர் பாலு வெற்றி பெற்றுள்ளார். அவருடன் போட்டியிட்ட ஆறுமுக நாகராஜ், உதயசூரியன் ஆகியோர் துணை தலைவர்களாகவும், திருஞானம் பொதுசெயலாளராகவும், மாரியப்பன் பொருளாளராகவும் வெற்றி பெற்றனர்.