Skip to main content

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

Published on 19/09/2021 | Edited on 19/09/2021

 

 

Students wishing to pursue higher education are invited to apply for a scholarship!


உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, "சேலம் மாவட்டத்தில் உள்ள 363 அரசு மற்றும் சுயநிதி பள்ளிகளில் நடப்பு ஆண்டு 39649 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, உயர்கல்வி பயில தகுதி பெற்றுள்ளனர். 

 

உயர்கல்வி படிக்க ஆர்வமுள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள் படிப்பதற்கு கல்விக்கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் கல்விக்கடன் முனைப்புத்திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலமாக கல்விக்கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் வங்கிக் கடன் வசதியைப் பெற, www.vidyalakshmi.co.in என்ற அரசு இணையதளத்தில் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 

 

மாணவர் மற்றும் பெற்றோரின் வங்கி சேமிப்புக்கணக்கு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, கல்லூரியில் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டுக் கடிதம், கல்விக்கட்டண விவரம் ஆகியவற்றை சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். 

 

இந்தக் கல்விக்கடன் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள, மாணவர்கள் ஏற்கனவே படித்த பள்ளிகளில் பொறுப்பாசிரியர் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டப்பட்டு வருகிறது. மேலும், ஆலோசனை வழங்க, மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள அறை எண் 211- ல் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. 

 

இத்துடன் 0427- 2414200 என்ற தொலைபேசி எண்ணும், 93427- 52510 என்ற வாட்ஸ்ஆப் எண்ணும், salemeducationalloan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். 

 

இது தொடர்பான விவரங்களை சேலம் மாவட்ட நிர்வாக இணையதளமான www.salem.nic.in என்ற இணைய தளத்திலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.