Skip to main content

கரோனா காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பியவருக்கு லாட்டரியில் கிடைத்த 12 கோடி!!...

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

12 crore won in the lottery for a person who returned to his hometown due to Corona !! ...
                                                           ஷர்புதீன்

 

கேரள லாட்டரியில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரியில் இந்த வருடம் முதல் பரிசு 12 கோடி என்று அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்தது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு முதல் பரிசு 12 கோடி கிடைத்துள்ளது.

 

அந்த பம்பர் பரிசின் குலுக்கல் கடந்த 17ம் தேதியன்று திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் ஆரியா ராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது. அதில், முதல் பரிசான 12 கோடி ரூபாய் எக்ஸ்.ஜி.358753 என்ற எண்ணுள்ள டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது.

 

அந்தப் பரிசைப் பெறும் அதிர்ஷ்டசாலி கேரள மாநிலத்தில் தென்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட அந்தச் சீட்டு தமிழக - கேரள எல்லையிலுள்ள ஆரியங்காவு நகரின் பரணி லக்கி சென்டரிலிருந்து விற்பனை செய்யப்பட்டது என தெரியவந்தது. அந்த லாட்டரி சென்டர் நடத்துகிற தமிழகத்தின் தென்காசியைச் சேர்ந்த மொத்த வியாபாரியான வெங்கடேஷ் என்பவரால் சுமார் 5700 டிக்கெட்கள் விற்கப்பட்டது என்பது தெரியவர, அதிர்ஷ்டசாலியைத் தேடும் படலம் தொடங்கியது.

 

அந்த லக்கி சென்டர் உரிமையாளருக்கும் அந்தச் சீட்டு யாரிடம் விற்கப்பட்டது என்று தெரியாத காரணத்தால், இரண்டு நாட்களாக அந்த அதிஷ்டசாலி யார் என்று தெரியாத குழப்பம் நீடித்தது.

 

தொடர் தேடலில், அந்த அதிர்ஷ்டசாலி, கேரள எல்லையை ஒட்டியிருக்கும், தென்காசி மாவட்டத்தின் இரவிய தர்மபுரம் கிராமத்தில் வசிக்கும் ஷர்புதீன் என்பது தெரிய வந்தது. நேற்றைய தினம் (20.01.2021) கேரள தலைமைச் செயலகத்திற்குச் சென்று அங்குள்ள லாட்டரித்துறை அலுவலகத்தில் அதன் இயக்குனர் கார்த்திகேயனிடம் டெபாசிட் செய்திருக்கிறார் ஷர்புதீன்.

 

12 crore won in the lottery for a person who returned to his hometown due to Corona !! ...

 

ஏஜண்ட் கமிசன் மற்றும் வரி நீங்கலாக 7.56 கோடி ஷர்புதீனுக்குக் கிடைக்கும். இதை விற்பனை செய்த வெங்கடேஷுக்கு ஏஜண்ட் கமிஷனாக, ஒரு கோடி 20 லட்சம் கிடைக்கும். 

 

ஷர்புதீன் கேரளா எல்லையை ஒட்டிய தமிழகத்தைச் சேர்ந்தவர். துபாயில் பணியிலிருந்தபோது கரோனா காரணமாக சொந்தக் கிராமம் திரும்பியவருக்கு வேலைவாய்ப்பில்லை. அதன் காரணமாக அண்டையிலுள்ள கேரளாவின் ஆரியங்காவு நகரில் வெங்கடேஷ் லக்கி சென்டரில் லாட்டரி சீட்டுக்களை வாங்கி ஆரியங்காவிலிருந்து புனலூர் வரை சென்று சில்லரை விற்பனை செய்து கிடைக்கும் கமிசனில் பிழைப்பை ஓட்டி வந்திருக்கிறார்.

 

இந்நிலையில், வழக்கமாக தான் விற்கும் லாட்டரி டிக்கெட்களில் ஒன்றை மட்டும் எடுத்து தனக்காக ஒதுக்கி வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட ஷர்புதீன், இந்தப் பம்பர் லாட்டரியிலும் தனக்காக ஒரு சீட்டை ஒதுக்கி வைத்துக்கொண்டு மற்றவைகளை விற்றிருக்கிறார். அப்படி எடுத்து வைத்த அந்த டிக்கெட்டின் எண்ணிற்குத்தான் பம்பர் பரிசாக 12 கோடி அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

 

கோடிகளைப் பரிசாகப் பெற்றவரும், கோடியைத் தாண்டிய கமிசனைப் பெறும் ஏஜண்ட்டும் தமிழர்களே என்பது கவனிக்கத்தக்கது. அதிர்ஷ்டசாலி ஷர்புதீனை நாம் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.