Skip to main content

தமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுங்கள்: வீடுதோறும் கறுப்புக் கொடி ஏற்றுங்கள்: திருமாவளவன்

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

 

thol.thirumavalavan


 

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுங்கள். வீடுதோறும் கறுப்புக்கொடி ஏற்றுங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

பாதுகாப்புத்துறைத் தொடர்பான கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். ஏற்கனவே திமுக தலைமையில் கூட்டப்பட்ட தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிரதமர் மோடி செல்லும் வழியெங்கும் கறுப்புக் கொடி ஏந்தி அறவழியில் நமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
 

உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவித்த பிறகும் அது விதித்தக் கெடுவை மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குத் தமிழக மக்களின் உணர்வுகளை எடுத்துக்காட்டும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இல்லங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டுமெனவும் கறுப்பு உடையோ கறுப்பு பட்டையோ அணிய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொல். திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
it dept raided the house where Thirumavalavan was staying

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களைத் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமீறல்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் விசிக வேட்பாளருமான தொல். திருமாவளவன் எம்.பி. தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் வருமான வரித்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இது குறித்து திருமாவளவன் கூறுகையில், “எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அச்சுறுத்தல்” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமாவளவன் சிதம்பரத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு வந்தபோது விசிக நிர்வாகி முருகானந்தம் என்பவர் வீட்டில் திருமாவளவன் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆளுநர் வருகை; கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Governor visit Those involved in the with the black flag

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து நேஷனல் கல்லூரியில் நடைபெறும் பன்னாட்டு விளையாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளார்.

இந்த சூழலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பியும் கருப்பு கொடி ஏந்தியும் திருவனைக்காவல் பகுதியில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். குறிப்பாக தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறார், தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் செயல்படுகிறார், திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவிக்கிறார் என என குற்றம்சாட்டியும், கண்டனங்களை எழுப்பியும் கருப்புக் கொடியுடன் சாலையின் ஓரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சாலையின் நடுவே சென்று பேருந்துகளையும், வாகனங்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.