Skip to main content

’ஏப்பா ... ஆளை விடுங்கப்பா...’- காரில் பறந்த அமைச்சர் செங்கோட்டையன்

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
ச்

 

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,   "தமிழ்நாடு முழுவதும் உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 11.17 லட்சம் மிதிவண்டிகள் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது." என்றவர்,  வருகிற ஜனவரி 10ம்தேதிக்குள் மடிக்கணினி வழங்கவும், அம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 

 

 இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் தான் இந்த ஸ்மார்ட் கார்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டில் மாணவரின் பெயர், முகவரி, ரத்தவகையுடன், ‘கியூ ஆர் கோடு’ மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பெற்ற மாணவரின் சிம்கார்டினைப் போட்டவுடன், மாற்றுச்சான்றிதழ் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த பள்ளி, கல்லூரியில் சேருவதாக இருந்தாலும், அவர்கள் இதற்கு முன் எந்த பள்ளியில் படித்தார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடியும். அடுத்து வருகிற
அரையாண்டுத்தேர்வு மதிப்பெண் என்பது வேறு பள்ளியிலோ, கல்லூரியிலோ சேர்வதற்கான மதிப்பீடு அல்ல. ஆகவே, புயல் பாதித்த மாவட்டங்களில் வழக்கம்போல், அரையாண்டுத் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி வகுப்பிற்கான ஊக்கத்தொகை வழங்குவதும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதே போல்  புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள 84 ஆயிரம் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அடுத்த நாளே வழங்கப்பட்டு விட்டது. புயலால் சேதமடைந்து மக்கள் மாளாத் துயரில் இருக்கும்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது." என்றவர்,


 
நிவராணப்பணிகளைக் குறை சொல்லும் நடிகர்கமல் போன்றவர்கள் அங்கு சென்று பார்வையிட வேண்டும். குறை சொல்வது சுலபம்; நிறைவு செய்வது கடினமான வேலை. நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனப் பேசிய செங்கோட்டையனிடம்,  செய்தியாளர்கள் " சார் ஓ.பி.எஸ்,,இ.பி.எஸ். பிரச்சனை தீர்ந்துவிட்டதா? தமிழக அரசு புயல் பாதிப்புக்கு கேட்டது 15 ஆயிரம் கோடி மத்திய பா.ஜ.க. அரசு இப்போது கொடுப்பது வெறும் 350 கோடி இது துரோகம் இல்லையா? "   என தொடர்ந்து அரசியல் கேள்விகள் கேட்க முயல,  "ஏப்பா ... ஆளை விடுங்கப்பா.... " என கும்பிடு போட்டுவிட்டு காரில் ஏறி பறந்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" - செங்கோட்டையன் 

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

admk sengottaiyan talks about admk won 39 parliamentary seat 
கோப்பு படம்

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி விட்டதாகவும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அதிமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோபி மொடச்சூர் சாலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழல் முறைகேடு, கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

தொடர்ந்து கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் "திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சரியில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே கள்ளச்சாராயம் பெருகிக் கொண்டுள்ளது. அதனால் 21 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. எந்த திட்டங்களையும் திமுகவால் கொண்டு வர முடியவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தில் எந்த தீய சக்திகளும் நடமாட முடியவில்லை. அதிமுகவை பொறுத்தவரை இரண்டு கோடி உறுப்பினர்களை கொண்டு வர வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இரண்டு கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக என்ற வரலாற்றை படைப்போம். அதிமுகவை எவராலும் வீழ்த்த முடியாது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பதை எவராலும் தவிர்க்க முடியாது.  2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைவதையும் எவராலும் தவிர்க்க முடியாது. அதிமுக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பிறகுதான் திமுக விழித்திருக்கிறார்கள். திமுக அரசுக்கு நம்மைப் போன்றவர்கள் கோஷம் போட்டால்தான் விடிகிறது. இல்லை என்றால் விடிவு இல்லை" எனப் பேசினார். 

 

 

Next Story

முதல்வரை கவர்னர் பாராட்டியுள்ளார்... - செங்கோட்டையன் பேட்டி!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

Interview

 

'நீட் தேர்வு' பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம், இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லக்கம்பட்டி பேரூராட்சியில், மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை இன்று (அக். 31ந் தேதி) நடைபெற்றது.

 

அதில், கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கும். நேற்று முன்தினம் வரை 9 ஆயிரத்து 848 பேர் பயிற்சிக்காகப் பதிவு செய்திருந்தனர். நேற்று மட்டும் கூடுதலாக 20 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இது அரசுப் பள்ளி மாணவர்களிடையே, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், மருத்துவராக வேண்டும் என்ற ஊக்கம் உருவாகியுள்ளதை வெளிப்படுத்துகிறது.

 

நேற்று, மருத்துவக் கல்விக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் அனுமதியளித்துள்ளார். தமிழக முதலமைச்சரை அவர் பாராட்டியுள்ளார். இந்த அரசு சட்டத்தின் மூலம், 303 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு 5.25 லட்சம் மாணவ மாணவிகள் அரசுப் பள்ளியில் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். தற்பொழுதுள்ள சுற்றுச்சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. திறந்தவெளியில் பள்ளிகள் நடத்தினால் மாணவ மாணவிகள் வெயிலிலும் பனியிலும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.