Skip to main content

திருட்டுத்தனமாக மீன்பிடிப்பவர்கள் செய்த கொலை! இரண்டு இளைஞர்கள் உடல் தேடல்

Published on 20/01/2019 | Edited on 20/01/2019
d


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் சார்பில் மீன் வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களை பிடிக்க 5 ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2018 ஜீலை மாதம் ஏலம்விடப்பட்டது. திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மீன் பிடிப்பதற்கான ஏலம் எடுத்துள்ளார்.


பரந்து விரிந்த அணையில் வெளியாட்கள் திருட்டு தனமாக மீன் பிடிப்பது வழக்கம். அதனை கண்டுபிடித்து தடுக்க ஒப்பந்ததாரர் கார்த்திகேயன் 5 இளைஞர்களை தினக்கூலி அடிப்படையில் அணையில் வேலைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் தினமும் படகில் அணையை சுற்றி வருவர்.


கடந்த 18.1.2019ந்தேதி மாலை 4 மணிக்கு, சிலம்பரசன், முனியப்பன், சுந்தரேஷ், மூர்த்தி, செந்தில் ஆகிய 5 பேர் மோட்டார் படகில் அணையில் காவல் பணியில் ஈடுப்பட்டு அணையை வலம் வந்துக்கொண்டு இருந்துள்ளார்கள். அப்போது, கொடிகம்பம், ஆணைமங்களம், போயம்பள்ளிதண்டா, மண்ணாண்டிப்பட்டி தண்டா, தாழையூத்து, புளியம்பட்டி, அரட்டவாடியை சேர்ந்த 50 பேர் அணையில் திருட்டு தனமாக வலை வீசி மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார்கள்.


இதைப்பார்த்துவிட்ட ரோந்து பணியில் இருந்தவர்கள் சத்தம் போட, மீன் பிடித்துக்கொண்டு இருந்தவர்கள் இவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். அதோடு வலையை வீசி அவர்களை அணையில் தள்ளியுள்ளனர். அதோடு, மீன்பிடி படகில் இருந்த இன்ஜீனை கழட்டி ஆற்றில் விட்டுள்ளார்கள். 5 பேரை அடித்து உதைத்துள்ளனர்.


அந்த கும்பலிடம்மிருந்து சிலம்பரசன், முனியப்பன், மூர்த்தி ஆகியோர் அவர்களிடம்மிருந்து தப்பி நிச்சல் அடித்து கரையின் மறுப்பக்கம் வந்துள்ளனர். செந்தில், சுந்தரேஷ் மட்டும் வரவில்லை. அதன்பின்பே அவர்கள் நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளது அந்த கும்பல் எனத்தெரிந்து இதுப்பற்றி ஓப்பந்ததாரர் கார்த்திகேயன்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


அவர் அதிர்ந்துப்போய் இதுப்பற்றி மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இருதரப்பும் சேர்ந்து காவல்துறையில் புகார் தந்ததன் அடிப்படையில் ஜனவரி 19ந்தேதி மதியம் முதல் இருவரின் உடல் தேடும் பணி சாத்தனூர் அணையின் உள்பக்கத்தில் தீயணைப்பு வீரர்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குவிந்துள்ளனர். 


அந்த இரு இளைஞர்கள் கொலைக்கு காரணமான திருட்டு தனமாக மீன் பிடித்தவர்கள் யார், யார் என 30க்கும் மேற்பட்டவர்களை பிடித்து வந்து சாத்தனூர்அணை மற்றும் செங்கம் போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். திருட்டு மீன் பிடிப்பவர்கள் ரோந்து சென்றவர்களை கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆந்திர அரசின் முடிவுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்! 

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Minister Duraimurugan strongly condemns Andhra govt decision

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சாந்திபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (26.02.224) குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் பாலாற்றில் ஆந்திர அரசு சார்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டு மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். கடந்த 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும் நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் ஆற்றுப் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று  உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு தீர்ப்பு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையைக் கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆந்திர அரசு இந்த அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இம்மாதிரியான எந்தவித செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது என இரு மாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

டெல்டாவில் தொடரும் மழை; அணைகளின் நிலவரம்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Continued rain; Status of dams

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மேலும் சில இடங்களில் மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தஞ்சை அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் மயிலாடுதுறையில் மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்து வருகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், அம்பாசமுத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாகையில் நாகூர், சிக்கல், பொரவச்சேரி, திருமருகல், போலகம், நரிமணம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

கன்னியாகுமரியில் சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து குறைந்ததால் நான்கு நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருகில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நான்காவது நாளாக குளிக்கத் தடை நீடிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 139.85 அடி அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2,023 கன அடியாக உள்ளது. அணையில் நீர் திறப்பு 300 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 7,088 மில்லியன் கன அடியாக உள்ளது. அதேபோல் வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. நீர்வரத்து 2,187 கன அடியாக உள்ளது. அணையின் நீர் திறப்பு வினாடிக்கு 2,319 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 5,681 மில்லியன் கன அடியாக உள்ளது.