Skip to main content

எந்த ஆட்சி வந்தாலும் கோவில்களில் ஊழல் இருக்கத்தான் செய்யும்! - மதுரை ஆதீனம்

Published on 02/09/2018 | Edited on 02/09/2018
Aathinam


எந்த ஆட்சி வந்தாலும் கோவில்களில் ஊழல் இருக்கத்தான் செய்யும் என மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் தெரிவித்துள்ளார்.

பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் முக்தி அடைந்ததற்கு அஞ்சலி செலுத்த கோவை வந்த மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,

தமிழ் வளர்ச்சிக்காகவும் சைவ சமையத்தின் எழுச்சிக்காக 70 ஆண்டி காலத்திற்கு மேல் பாடுபட்டவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார். தமிழக ஆலையங்களில் தமிழில் தான் வழிபாடு இருக்க வேண்டும் என தன்னை அர்ப்பணித்தவர். பேரூர் மடாலயத்தின் பெருமையை மேலும் உலகம் முழுவதும் பரப்ப மருதாச்சல அடிகளாரை தன் இளவரசாக்கி உயிரோடு வாழும்போதே சரியான பயிற்சி தந்து மேலை நாடுகளுக்கு அனுப்பி பிரச்சாரம் செய்ய பணித்தார்.

பேரூர் ஆதீனமாக மருதாசல அடிகளார் பட்டமேற்பு விழா 10ம் நாள் குருபூஜையான 10.9.2018 அன்று விழா சிறப்போடு நடைபெற உள்ளது. சைவ சமயத்தையும் தமிழையும் தமிழ் வளர்ச்சியையும் வலியுறுத்தும் மடாலயமாக பேரூர் திகழ்கிறது. தமிழுக்காக உழைக்கும் நான்கு பீடங்களும் இங்கு உள்ளது. தமிழக அரசியல் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முதல்வரும் துணை முதல்வரும் தமிழகத்தில் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து வருகின்றனர். சில குறைகள் ஆட்சியில் இருக்க தான் செய்யும். சட்டமன்ற தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்தினால் நிதி சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் மாநில அரசுகள் செயல்பட முடியாது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே நிதிகளை மாநில அரசுகள் கேட்டு பெற முடியும்.

பிரதமர் மோடி அனைத்து மாநில அரசுகளுக்கும் தேவையானதை சிறப்பாக செய்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல் நடத்துவதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன. நிர்வாக சிக்கல்கள் காரணமாக ஓரே மொழி ஓரே இனம், ஒரே நாடு என்பதை சில மாநிலங்கள் ஏற்கவில்லை. இதற்கு மத்திய அரசு ஒரு தீர்வு காண வேண்டும். சிலை கடத்தல் விவகாரத்தில் ஐஜி பொன்மாணிக்கவேல் நேர்மயாக பணியாற்றி பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார். இதனால் அரசுக்கும் அவருக்கும் மன சங்கடங்கள் சில உருவாகியதாகவும் அது விரைவில் தீரும்.

நித்தியானந்தா மதுரை ஆதீனத்திற்குள் நுழைய முடியாது. ஒருமுறை ஆதீனத்திலிருந்து நீக்கப்பட்டால் மீண்டும் அவரை சேர்த்து கொள்ள முடியாதது ஏனெனில் அவர் சாதாரண மனிதரல்ல அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்கு இருப்பதால் சாதாரண மனிதராக கூட மதுரை ஆதீனத்திற்குள் நுழைய முடியாது. எந்த ஆட்சி வந்தாலும் கோவில்களில் ஊழல் இருக்கத்தான் செய்யும் இதனை ஒழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மதுரை ஆதீனத்தின் புரிதலுக்காக இந்த நினைவூட்டல்"- முரசொலியில் வெளியான கட்டுரை! 

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

"This Reminder for Understanding Madurai Athena" - Article published in Murasoli!

 

மத நம்பிக்கைகளில் தி.மு.க. அரசு தலையிடுவதில்லை என மதுரை ஆதீனத்திற்கு பதில் தரும் வகையில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 

 

'அத்துமீறும் மதுரை ஆதீனம் அறிவதற்கு!' என்ற தலைப்பில் முரசொலியில் வெளியாகியிருக்கும் கட்டுரையில் எம்மதத்தவராக இருந்தாலும், அவர்களது மத நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டோடு தி.மு.க. செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காஞ்சி ஜெயேந்திரருக்கு என்ன கதி ஏற்பட்டது? அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நிகழ்வுகள் எத்தனை நடந்தன என்பது மதுரை ஆதீனத்திற்கு நினைவிருக்கும். பிரதமர் நரேந்திர மோடியிடம் செல்வேன்; அமித்ஷாவிடம் செல்வேன் என்று பூச்சாண்டிக் காட்டும் மதுரை ஆதீனத்தின் புரிதலுக்காக இதை நினைவூட்டுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

 

தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும், துறைச் சார்ந்த அமைச்சரும் தமிழகம் அமைதிப் பூங்காவாக அனைத்து மதத்தினரும் அண்ணன், தம்பிகளாக ஒன்றுப்பட்டு வாழ வேண்டும் என்ற நோக்கில் எடுக்கும் முடிவுகள் பலராலும் பாராட்டப்படும் நிலையில், மதுரை ஆதீனகர்த்தர் மட்டும் வெறுப்பு உருவாகும் நிலையில், தொடர்ந்து பேசுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

மதுரை ஆதீனம் இருப்பது தமிழ்நாடு! என்றும், இந்த மண்ணில் உள்ள பல சைவ ஆதீனங்கள் எந்த சலசலப்பும் இல்லாமல் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர் என்றும் முரசொலி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மதுரை ஆதீனம் எல்லை மீறுகிறார், பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அவர் உணர வேண்டும் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

நீங்களாம் தளபதியைப் பத்தி தப்பா பேசலாமா? மதுரை ஆதீனத்திற்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள் 

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

Madurai Vijay fans condemning Madurai Aadeen talk about vijay film

 

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் அண்மையில் விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மதுரை ஆதீனம், ''சமீபத்தில் தொலைக்காட்சியில் படம் ஒன்றை பார்த்தேன். விஜய்னு ஒரு நடிகர் நடிச்ச படம். அதில் அந்த நடிகர் சொல்கிறார் ''புள்ளையாரே... புள்ளையாரே... உனக்கு பூ சாத்துனா செடி அழுகுது. என் காதலிக்கு சாத்துனா செடி சிரிக்குதுனு' சொல்றாரு. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் அப்படி சொல்லுவாரு. அவர் படத்தை பார்க்காதீங்க. இப்படி நமது கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். இதை சொன்னால் என்னை சங்கினு சொல்கிறார்கள்" என்றார். 

 

இதனைத்தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு ஒரு படி மேலே சென்ற மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஆதீனத்துக்கு எதிராக போஸ்டர் அடுத்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் "எச்சரிக்கை, மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா? "வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி, மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை" என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை சீண்டும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.