Skip to main content

சிறுவர்களுக்கிடையே தகராறு... சிறுமியை கட்டையால் அடித்துக் கொன்ற பெண்..!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

பள்ளி சிறுவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக, சிறுவனின் சகோதரியான 3ம் வகுப்பு பள்ளி மாணவியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்த இரக்கமற்றப் பெண்ணை வழக்குப் பதிவு செய்து கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர் போலீசார்.

 

 

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள மங்களம் கிராமத்தினை சேர்ந்தவர் விவசாயி முருகவேல் அழகுஜோதி தம்பதியினர். இவர்களுடைய 2 மகன்களும், ஒரு மகளும் அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். அதே ஊரில் வீட்டின் அருகே இருந்த செல்வராஜூவிற்கும் இவரது குடும்பத்திற்கும் நீண்ட காலமாக இடப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இவ்வேளையில், சமீபத்தில் செல்வராஜூவின் குழந்தைகளுக்கும், முருகவேல் குழந்தைகளுக்கும் வீட்டின் அருகே சண்டையிட்டுள்ளனர். சிறுவர்கள் தகராறு பெரியவர்கள் தகராறு ஆக, செல்வராஜூவிற்கு ஆதரவாக அவரது உறவினர் கார்த்திக்கின் மனைவி சந்திராவும் சண்டையிட்டிருக்கின்றார். " அவர்கள் இரு குடும்பத்திற்குமான சண்டையில் உன்னுடைய தலையீடு எதற்கு..?" என சந்திராவினை ஊரார்க் கண்டிக்க பிரச்சனை அப்பொழுது சுமூகமாகியுள்ளது.

 

school student murder in ramanathapuram; police arrest women!!

 

ஆனால் ஆத்திரம் தீராத சந்திரா, ஞாயிற்றுக்கிழமையன்று கடைத்தெருவிற்கு சென்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் முருகவேலின் மகள் விஜயலெட்சுமியை தன்னுடைய வீட்டிற்கு இழுத்து வந்து உருட்டுக்கட்டையால் தாக்க மயங்கியுள்ளார் அச்சிறுமி. மயங்கி விழுந்த சிறுமி விஜயலெட்சுமியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதுகுறித்து தந்தை முருகவேல் அளித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் டி, எஸ்,பி, சண்முகசுந்தரம்(பொ) உத்தரவின் பேரில் கடலாடி இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்கு பதிந்து கொலையாளி சந்திராவை கைது செய்து மதுரை சிறைக்கு அனுப்பி வைத்தார். ஆத்திரத்தில் ஏழு வயது சிறுமியை அடித்துக்கொலை செய்த இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.