Skip to main content

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வியாழக்கிழமை (மார்ச் 7, 2019) காலை 10 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம். அது, இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

 

t

 

இதுகுறித்து உடனடியாக சென்னை காவல்துறையினர், சேலம் மாநகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் ஒவ்வொரு அறையிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்டனர். மோப்ப நாய் உதவியுடனும் சோதனை நடந்தது. ஆட்சியர் அலுவலக வெளிப்புற பகுதிகளிலும் சோதனை நடந்தது. 


நுழைவுவாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் இருக்கிறதா என்றும் ஆய்வு செய்தனர். அவற்றில் காகித கட்டுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கிடந்தன. வெடிகுண்டு உள்ளிட்ட மர்மப் பொருள்கள் ஏதும் இல்லை. 


தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த ஆட்சியர் வளாகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு இதுபோன்ற வதந்தியைப் பரப்பியிருப்பது தெரிய வந்தது.


சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண் எந்த டவர் எல்லையில் இருந்து வந்தது? என்பது குறித்தும், மர்ம நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகள் காரணமாக வந்த பொதுமக்கள், அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.