Skip to main content

14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 Rain alert for 14 districts

தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மற்றும் கோவையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்