Skip to main content

''ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக'';ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்- ஸ்டாலின் பேச்சு!

Published on 16/12/2018 | Edited on 16/12/2018

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் வெண்கல திருவுருவச் சிலையை திறந்து வைத்த பிறகு மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல முக்கிய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். அந்த மலரஞ்சலி நிகழ்விற்குப் பிறகு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தி பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

 

 

Rahul Gandhi to be PM - Stalin talks!

 

நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன், திளைத்துப்போய் நின்றிருக்கிறேன். காரணம் தமிழர்களுடைய வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான நாள். மறக்கமுடியாத நாளும் கூட, இக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், தந்தை பெரியார் பிறந்த நாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள், நமது தலைவர் கலைஞர் பிறந்தநாள், அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட நாள், இந்த புகழ்மிக்க வரிசையிலே கலைஞர் சிலை திறப்பு விழா நாளும் இணைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். திமுகவின் அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமான நாள் மட்டுமல்ல, என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாள் இந்த நாள். 

 

 

1971 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக கலைஞர் இருந்தபொழுது, தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய தலைவர் கலைஞருக்கு சிலை வைத்திட வேண்டும் என முடிவு செய்து அதற்காக ஒரு குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவிற்கு புரவலராக தந்தை பெரியார் அவர்களே பொறுப்பேற்றார். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பெரியார் அவர்கள் மறைந்தார்கள். பின்னால் மணியம்மையார் அவர்கள் அந்த பொறுப்பை ஏற்று  கலைஞருடைய சிலையை அண்ணாசாலையில், எல்ஐசி கட்டிடத்திற்கு அருகில் வைத்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். அதற்குப் பிறகு அந்த சிலை விவகாரம் என்ன என்பது உங்களுக்குப் புரியும்.

 

D

 

இன்றைய தினம் நம்முடைய தலைவர் கலைஞருக்கு திறக்கப்பட்டுள்ள சிலை அண்ணாவின் அருகிலே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்ற அவருக்கு நாளெல்லாம் அண்ணா... அண்ணா... என்று உருகிய தலைவருக்கு, அண்ணா சாலையில், அண்ணா அறிவாலயத்தில், அண்ணா சிலைக்கு அருகில் நம்முடைய தலைவர் கலைஞருடைய சிலை அமைக்கப்பட்டிருக்கிறது மகிழ்ச்சிகரமானது.

 

 

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி தன்னை பிரதமர் என்று நினைக்காமல் ஏதோ பரம்பரை மன்னர் ஆட்சி நடத்துவதாக மமதை கொண்ட பிரதமராக மோடி இருக்கிறார். தன்னை பிரதமராக மட்டுமல்ல ஜனாதிபதியாக, தன்னை உச்சநீதிமன்றமாக, தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே சிபிஐயாக, தன்னையே வருமானத்துறையாக நினைத்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அனைத்து கட்சிகளும் சேர்ந்து நரேந்திரமோடிக்கு எதிராக ஒன்று திரண்டு இருக்கிறோம். இது ஏதோ நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக அல்ல நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சேர்ந்திருக்கிறோம்.

 

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவோடு மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்போதெல்லாம் நம்முடைய தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு திட்டங்களை சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது, நம் மொழி தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தரப்பட்டது, சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போதைய பிரதமர் சாடிஸ்ட்டாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் மோடி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இந்த வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன் என்று சொன்னால் அவ்வளவு பெரிய பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் கஜா புயலில் 65 பேர் இறந்தார்கள், 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று சொன்னால் இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். இவ்வளவு பெரிய பேரிடர் குஜராத்தில், மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருந்தால் நரேந்திரமோடி சென்று சென்று பார்க்காமல் இருப்பாரா? மாட்டாரா? தமிழ்நாடு என்பதால் மறந்துவிட்டார். 

 

 

ஆள் வரவில்லை ஆனால் அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம். ஒரு ஆறுதல், கவலை கொண்டேன் என்று ஒரு செய்தி அல்லது இரங்கல் தெரிவித்து ஏதேனும் ஒரு செய்தி உண்டா. அந்த அளவிற்கு தமிழ்நாடு என்ன பாவப்பட்டு கிடைக்கிறதா?. 2017ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் நாள் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடந்தது இறந்தவர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ட்விட் போடுகிறார். ஆனால் தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல் கூட சொல்ல மறுக்கிறார். எனவேதான் அவரை  கொடூர மனப்பான்மை கொண்டவர் என நான் இங்கே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். அவ்வளவு அலட்சியமா அதனால்தான் மோடியை வீழ்த்த வேண்டும் என்று சொல்கிறோம். 21 கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன, இன்னும் பல கட்சிகள் வரத்தான் போகிறது. இந்த நாடு பார்க்கத்தான் போகிறது. இந்த மேடையில் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிகிறேன் என்று கூறிய  ஸ்டாலின்  ராகுல் காந்தியே  வருக நல்லாட்சி தருக என்ற முழக்கத்துடன் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.