Skip to main content

குடி தண்ணீரின்றிப் சாகப் போகும் கோவை

Published on 22/06/2018 | Edited on 22/06/2018

 

சுயஸ் ..
 

இந்த பெயர் தான் கோவை மக்களை திணறடிப்பதோடு கோவை மக்களிடம் தற்போது அதிகமாக பதறிப்  போய்  பேசப்படும் பெயராகவும்  மாறி இருக்கிறது. 
 

ஏனெனில் இனி தங்களுக்கு குடிநீர் கிடைக்குமா?  என்பதை நிர்ணயிக்கும் உரிமையை அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளதே  காரணம். 

அதாவது கோவை மாநகராட்சியில் 24*7 என்ற முறையில் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் உரிமையை பிரெஞ்சு நாட்டினை சேர்ந்த சுயஸ் பிராஜக்ட்ஸ் பிரைவட் லிமிடெட் என்ற நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. 

 

 

 

இத்திட்டத்தினை 556.57 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் குழாய்கள், நீர்தேக்க தொட்டிகள், நீர் உந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க முடிவு செய்துள்ளது. 
 

இத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும், தானியங்கி குடிநீர் அளவுமானிகள் பொருத்தப்பட்டு எந்த நேரமும் பணம் செலுத்தும் இயந்திரம் வழங்கப்படுமெனவும் மாநகராட்சி 2018-19 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 

இதனிடையே சுயஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... கோவை மாநகருக்கு குடிநீர் விநியோகிக்கும் உரிமையினை கடந்த பிப்ரவரி மாதம் 400 மில்லியன் யூரோ தொகைக்கு குத்தகைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

 

water


 

இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 3 ஆயிரத்து 100 கோடியாக உள்ளது. 1.6 மில்லியன் குடியிருப்புகளுக்கு குடிநீர் 24 மணி நேரமும் வழங்க உள்ளதாகவும், ஒராண்டு ஆய்வு காலம், செயல்படுத்த 4 ஆண்டுகள் உட்பட 26 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. டெல்லி மாளவியா நகரில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், இந்தியாவில் இரண்டாவது நகரமாக கோவையில் செயல்படுத்தப்பட உள்ளது. 
 

இதேபோல பெங்களூரு, கோல்கத்தா நகரங்களிலும் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதல்கட்டமாக ஒன்றரை இலட்சம் வீடுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்தவும், மாநகராசியில் உள்ள குடிநீர் இணைப்புகள் குறித்த கணக்கெடுக்கும் பணிகளை அந்நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.
 

24 மணி நேரமும் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும், பணம் இருப்பவர்களுக்கே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை உருவாகும் என கோவை மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் .
 

இலவசமாக தண்ணீர் கொடுக்கும் பொதுக்குழாய்கள் அகற்றப்படுமா? பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா? சுயஸ் நிறுவனம் எப்படி குடிநீர் கட்டணத்தை நிர்ணயிக்கும்? அத்தியாவசிய தேவையான குடிநீரை வாடிக்கையாளர் என்ற முறையில் எப்படி வாங்க முடியும்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார்கள்  சமூக ஆர்வலர்கள் .
 

''மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தாமல் சுயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி குத்தகைக்கு வழங்கி இருப்பதாகவும், அந்நிறுவனத்தின் குடிநீர் விநியோகம் தொடர்பாக வெளிப்படைதன்மை இல்லை எனவும் கூறிய அவர், இத்திட்டம் குறித்து மாநகராட்சி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் '' சூழலியல் செயற்பாட்டாளாரான சிவா .

 

 

 

மேலும் அவரே ...கோவையின் குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி, பில்லூர் அணைகள் முதல் ஒவ்வொரு வீட்டின் தண்ணீர் தொட்டிகள் வரை அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் எனவும், உள்ளாட்சி அமைப்புகளும், மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளும் இல்லாத நேரத்தில் குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும் 
 

சுயஸ் நிறுவனம் மீது வெளிநாடுகளில் நிறைய புகார்கள் இருக்கின்றன . அதாவது  மழைத் தண்ணீரை கூட மக்களை சேகரிக்க விடுவதில்லை என்ற புகார் இருப்பதாகவும், அந்த நிலை கோவைக்கும் வர உறுதியாய் வாய்ப்புள்ளதாகவும் 
 

ஒவ்வொரு வீட்டிலும் மாதந்தோறும் குடிநீருக்கு பெரும் தொகையை ஒதுக்க வேண்டி வரும் என தெரிவித்தார். 

கோவை மாநகராட்சியில் சீராக தண்ணீர் விநியோகித்தாலே போதும் எனவும், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக குடிநீர் பகிர்ந்தளிக்க வேண்டியது அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்தார். 
 


இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனிடம் விளக்கம் கேட்ட போது....சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களால் அதிக அளவில் குடிநீர் வீணாகிறது .  இதனை மாற்ற பெரும்தொகை தேவைப்படும் என்பதால் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கி உள்ளோம் . 
 

மேலும் மாநகராட்சி நிர்வாகமும், அரசுமே குடிநீரின் விலையினை நிர்ணயிக்கும். தேவைக்கேற்ப பொதுக்குழாய்கள் இருக்கும் . குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

ஆளும் அரசு என்ன  வேண்டுமானாலும் சமாளிப்பு சொல்லட்டும் .  ஆனால் எந்த சமாளிப்பையும் சமாளிக்க  முடியாத எங்கள்  மீது  உங்கள்  பண ஆசைக்காக  தண்ணீரின்றி தவிக்க வைத்து விடாதீர்கள் எனத்தான் ஆளும் அரசிடம் இரந்து கேட்கிறார்கள் .
 

இரந்து கேட்பவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வருமா... துப்பாக்கிகளின் குண்டுகளில் மக்களை கொலை செய்யும் அதிமுக அரசு ? என்கிற  குரல்கள்தான் ஓங்கி ஒலிக்கின்றன மேற்கு மலைத் தொடர்ச்சி மலையின் மீது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.