Skip to main content

ஓட்டுப் போடும் முன்பு ஒரு மரக்கன்று நடுவோம்! 5 ஆண்டுகளில் பலன் கொடுப்பது நீங்கள் வைத்த மரமா? நீங்கள் போட்டா ஓட்டா?

Published on 18/03/2019 | Edited on 19/03/2019


 
    ஒவ்வொரு வாக்காளரும் ஓட்டுச் சாவடிக்கு செல்லும் முன்பு ஒரு மரக்கன்று நட்டுவிட்டு செல்லுங்கள். 5 ஆண்டுகளில் நீங்கள் ஓட்டுப்போட்ட வேட்பாளர் பலன் கொடுக்கவில்லை என்றாலும் நீங்க நட்ட மரம் பலன் கொடுக்கும் என்று சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மரக்கன்று நட அழைப்பு கொடுத்துள்ளனர்.

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் மரக்கன்று நடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை இளைஞர்கள் பதிவிட்டும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

 

t


  

 அதாவது ஒவ்வொரு வாக்காளரும் வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டுப் பதிவு செய்யும் முன்பு தங்கள் வீட்டிலோ அல்லது சாலை ஓரங்களிலோ ஒரு மரக்கன்று அல்லது செடியை நட்டு வைத்துவிட்டு ஓட்டுப் போடுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் அந்த கன்றை வளருங்கள். இறுதியில் நீங்கள் ஓட்டுப் போட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் உங்களுக்கு பலன் கொடுக்கவில்லை என்றாலும் நீங்க நட்டு வளர்த்த மரம் நிச்சயம் பலன் கொடுக்கும். அதனால் ஒவ்வொரு வாக்காளரும் ஒரு மரக்கன்றை நட்டுவிட்டு வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களியுங்கள் என்று அந்த பதிவுகள் செல்கிறது. 

 


    இது குறித்து சமூகவலைதளங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருபவர்களில் ஒருவரான யாதும் ஊரே யாவரும் கேளீர் அமைப்பை சேர்ந்த எடிசன் கூறும் போது.. நாட்டில் காடுகள், மரங்களின் பரப்பளவு குறைந்து கொண்டே வருவதால் வெப்பம் அதிகமாகவும், மழை குறைவாகவும் உள்ளது. அதனால் சராசரியாக பெய்ய வேண்டிய பருவமழை கூட நமக்கு கிடைக்கவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு கிடக்கிறது. விவசாயம் பொய்த்துப் போனது. இந்த நிலையில் மரங்கள் அதிகமாக உள்ள பகுதியில் கஜா புயல் தாக்கி ஒட்டு மொத்த மரங்களையும் அழித்துவிட்டு சென்றது. 

 


    அதனால் மீண்டும் மழை பெறவும் விவசாயம் செழிக்கவும் மரங்கள் அவசியம். அதனால் தான் மரக்கன்றுகளை நடவேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது தேர்தல் நடக்க உள்ளது. இந்திய முழுவதும் நடக்கும் தேர்தல். இந்த தேர்தலில் வாக்களிக்க செல்லும் ஒவ்வொரு வாக்காளரும் ஒரு மரக்கன்றை நட்டு வளர்த்தாலே ஒரே நேரத்தில் கோடிக்கணக்கில் மரங்களை வளர்த்துவிடமுடியும். அதனால் தான் சமூகவலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளோம். இதில் இளைஞர்கள் ஆர்வத்தொடு அந்த தேர்தல் நாளுக்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் போடும் ஓட்டு எங்களுக்கு பலன் கொடுக்கவில்லை என்றாலும் நாங்கள் நடும் செடியும், மரமும் நிச்சயம் பலன் கொடுக்கும் என்றார்.
            

சார்ந்த செய்திகள்

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.