Skip to main content

டெல்டா மாவட்ட அரசு நெல் கொள்முதல் நிலையங்களை நிரப்பும் வெளிமாவட்ட நெல்...

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அறுவடை முடிந்துவிட்டதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவது குறைந்துள்ளது. நெல் அறுவடை முடிந்துவிட்டதை சாதகமாக்கிக்கொண்ட தனியார் நெல் வியாபாரிகள் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து நெல்லை கொண்டுவந்து விற்பனை செய்யும் அவலம் தொடர்ந்துவருகிறது. இது விவசாயிகளின் காப்பீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் விவசாயிகள்.

 

private players filling State Paddy Purchase Center


நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திருவண்ணாமலை, சேலம் போன்ற வெளிமாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் தரமில்லாத நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி லாரி லாரியாக கொண்டுவந்து  இங்குள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்துவருகின்றனர். இரவு நேரங்களில் லாரிகளில் இருந்து இறக்கிய நெல்லை தூற்றாமல் உடனே சாக்குகளை மாற்றி அட்டியலில் அடுக்குகின்றனர்.

 
இதுகுறித்து கடைமடை விவசாயி ஒருவர் கூறுகையில், “இதுபோல் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதால் இப்பகுதியில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகையை பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் குறைத்துவிடுகின்றன. நல்ல விளைச்சல் உள்ள இடங்களில் பயிர் காப்பீடு வழங்குவது குறைக்கப்படுவது வாடிக்கை. இது போன்ற வெளிமாவட்ட நெல் இங்கே விற்கப்படும்போது இப்பகுதி நல்ல விளைச்சல் என குறைத்துவிடுகின்றனர்” என்கிறார்.

 

private players filling State Paddy Purchase Center

  
பயிர் காப்பீடு குறையும் என்ற காரணத்தை வலியுறுத்தி வெளிமாவட்ட நெல் மூட்டைகளை விற்க இப்பகுதி விவசாயிகள் தடுத்து வந்தனர். இதற்கிடையே நேற்று இரவு 9 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து 356 நெல் மூட்டைகளுடன் நல்லத்துக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குள் நுழைந்த லாரியை அப்பகுதி விவசாயிகள் சிறை பிடித்தனர். அதுமட்டுமின்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி நடவடிக்கை கோரியுள்ளனர்.

 

 


  

சார்ந்த செய்திகள்

Next Story

திணறும் தலைநகர்; டெல்டாவில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
rally in Delta district in support of Delhi struggle

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்து என்பன உள்ளிட்ட வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்த பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் இந்தியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற போது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து  தடுக்கப்பட்டனர்.

தடுப்புக்கட்டைகளை தகர்த்தெரிந்த விவசாயிகள் தடையை மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட போது சொந்த நாட்டு விவசாயிகள் மீதே கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். அந்த தடைகளையும் தாண்டிச் செல்லும் போது ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு அடிபட்டு தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயியும் போராட்டக்களத்திலேயே உயிர்நீத்தனர். இதற்கிடையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

rally in Delta district in support of Delhi struggle

அதன் பிறகும் விவசாயிகளை முன்னேற விடாமல் மத்திய அரசின் போலீசார் தடுத்து வருகின்றனர். விவசாயிகள் உயிர்ப்பலியானதால் தற்காலிகமாக முன்னேறிச் செல்வதை நிறுத்தி அதே இடத்தில் தங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிடாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் அரணாக உள்ளது.

இந்திய விவசாயிகளுக்காக டெல்லி எல்லையில் போராடும் பஞ்சாப், அரியானா விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், விவசாய நாடு என்று வெளியில் சொன்னாலும் சொந்த நாட்டு விவசாயிகளையே சுட்டு விரட்டும் மத்திய அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கொண்டுள்ளது.

rally in Delta district in support of Delhi struggle

இந்த வகையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட எல்லை கிராமமான ஆவணம் கைகாட்டியில் டிராக்டர் பேரணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் நள்ளிரவில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வந்த டிராக்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். ஆனால் திட்டமிட்டபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த டிராக்டர்களையும் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதே நேரத்தில் பாஜகவினரும் அதே பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.