Skip to main content

கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..! (படங்கள்)

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

இன்று (11.06.2021) பூந்தமல்லி நெடுஞ்சாலை, சங்கம் தியேட்டர் அருகில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்படி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வழிகாட்டுதலோடு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கடுமையாக உயர்த்திய மக்கள் விரோத பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விலை உயர்வு மற்றும் பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கண்டன உரை நிகழ்த்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்