Skip to main content

மக்கள் கேள்விகேட்டு பழக வேண்டும்- கமல்!!

Published on 26/01/2019 | Edited on 26/01/2019

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இன்று கடலூர் மாவட்டம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

 People should ask questions - Kamal !!

 

குணமங்கலம் என்ற கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் பேசிய அவர்,

"மக்கள் கேள்வி கேட்டு பழக வேண்டும் இது போன்ற கிராமசபை கூட்டங்களில் எல்லோரும் கலந்து கொள்வதோடு நம் ஊருக்கு என்ன தேவை என்பதையும் பேச வேண்டும். பொங்கல் பரிசு இரண்டாயிரம் கோடி கொடுத்துள்ளார்களே அந்தப் பணம் எங்கிருந்து வந்தது?, ஏன் பஞ்சாயத்து தேர்தல் நடத்த மறுக்கிறார்கள்?,  உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தான் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புக்கு வர முடியும் அந்த கிராமங்களை செழிக்க வைக்க, அடிப்படையான பிரச்சனைகளை தீர்க்க முடியும் கிராமத்தின் வளர்ச்சி தான் நாட்டின் அடிப்படையானது " என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்