Skip to main content

பேய் பீதி... மாலையானதும் வீட்டுக்குள் முடங்கும் மக்கள்

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

 Panic of ghosts...people who stay indoors in the evening

 

பெங்களூர் டூ பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பக்கிரிப்பாளையம் அந்தனூர் கிராமத்தின் வழியாக செல்கிறது. இந்த கிராமத்தில் எல்லைக்குள் கடந்த 6 மாதத்தில் மட்டும் 70 விபத்துகளும், அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியும் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடந்த விபத்தில் 8 பேரும், அக்டோபர் 23 ஆம் தேதி நடந்த விபத்தில் 7 பேரும் மரணமடைந்தனர். இரண்டு பெரிய விபத்துகளையும், மரணங்களை பார்த்தும் அந்தனூர் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

 

இந்த இடத்தில் பேய்களின் நடமாட்டம் உள்ளது. அதனால் தான் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன என நினைத்து இக்கிராம மக்கள் பலரும் பயப்படுகின்றனர். இதனால் மாலை 6 மணியானால் வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் பயந்து கொண்டு வீட்டுக்குள் முடங்கி விடுகின்றனர். வீட்டுக்கு வெளியே பேய், பிசாசுகளிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வேப்பிலை கொத்துகளை சொருகி வைத்துள்ளனர். இரவானதும் வீட்டுக்கு வெளியே விளக்கு ஏற்றி வைத்து வழிபட துவங்கியுள்ளனர்.

 

விபத்து நடந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களையும் பேய், பிசாசு என்கிற பீதி பயமுறுத்தியுள்ளது. இதனால் சில ஆசிரியர்கள் எலுமிச்சை பழம் வாங்கி வந்து சுற்றி போட்டுள்ளனர்.

 

 Panic of ghosts...people who stay indoors in the evening

 

இதுபற்றி நம்மிடம் பேசிய சபிதா என்கிற பெண்மணி கூறுகையில், ''அடிக்கடி விபத்து நடக்குதுங்க அதுக்கு என்ன அர்த்தம்? பேய், பிசாசு இருக்குதுன்னு சொல்றாங்க. அதனால் வீட்டை விட்டு போகவே பயமா இருக்கு. அடிக்கடி விபத்து நடப்பதால் ஏதோ ஒன்னு பழிவாங்குதுன்னுதானே அர்த்தம். அதனால்தான் இரவானால் வீட்டு ஆம்பளைங்கள வெளியில போக வேணாம்'னு சொல்லி தடுத்து இருக்கோம். அப்படியே போகனும்னா டூவீலரை விட்டுட்டு நடந்தே போகச் சொல்லியிருக்கோம், அவுங்களும் போகறதில்லை. சாம்பல், மை வாங்கி வந்து வீட்ல வச்சு காத்து, கருப்பு, பேய், பிசாசு அண்டாம இருக்கனும்'னு சாமி கும்பிடறோம்'' என்றார்.

 

அரசு பேருந்து நடத்துநர் மணிகண்டன் கூறுகையில், ''இங்கு அடிக்கடி விபத்து நடப்பதால் பேய், பிசாசுகள் வேலைன்னு மக்கள் பயப்படறாங்க. அதனால் இரவில் மக்கள் அந்த சாலையில் போக அச்சப்படறாங்க. பகலில் போகவும் பயப்படக் காரணம், இங்கு நிறைய விவசாய நிலம் சாலையின் அந்தப்பக்கம் இருக்கு. அதனால் ரோட க்ராஸ் செய்து போக வேண்டியிருக்கு. ஸ்கூல்க்கு அந்தப்பக்கம் இருந்து சாலையை க்ராஸ் செய்து மற்ற ஊர் பசங்க வர வேண்டியிருக்கு. இதனால் விபத்து நடந்துடுமோன்னு மக்கள் அச்சப்படறாங்க. தேசிய நெடுஞ்சாலை என்பதால் மித மிஞ்சிய வேகத்தில் போறாங்க, கார் தான் அதிகளவில் விபத்தில் சிக்குது, குடிச்சிட்டு தாறுமாறாக வண்டி ஓட்டுறாங்க. அதுதான் விபத்துக்கு காரணம், அதனால்தான் விபத்து நடக்குது, வேகத்தை குறைத்தாலே விபத்துக்கள் நடக்காது'' என்றார்.

 

n

 

இடதுசாரி கட்சியை சேர்ந்த குமார் என்பவர் கூறுகையில்,  ''அதிகமான வாகனங்கள் செல்கிறது. அதனால் இங்கு அடிக்க விபத்துக்கள் நடக்கிறது. சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைத்து தந்து இருந்தால் விபத்துகள் நடக்காது. திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி வரை எங்கும் சுரங்கப்பாதையே கிடையாது. மாடுகள் சாலையை கடந்து தினமும் காலையும், மாலையும் போய் வருகின்றன. அதேபோல் அதிக அளவு மாணவர்கள் சாலையை கடந்து பள்ளிக்கு வருகிறார்கள். இங்கு அடிக்கடி விபத்து நடப்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்கு பேய், பிசாசு என சிலர் சொல்கிறார்கள், அது எல்லாம் உண்மையில்லை. அரசாங்கம் சாலை விரிவாக்கத்தின் போது 2 கி.மீ - க்கு ஒன்று என்கிற கணக்கில் சுரங்கப்பாதை அமைத்து தந்துவிட்டால் மக்கள் ஆபத்தான சாலையை கடப்பதற்கு பதில் சுரங்கப்பாதை வழியாக செல்வார்கள் விபத்துகள் குறையும்'' என்றார்.




என்னதான் சொன்னாலும் இந்த விபத்துகளால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். பேய், பிசாசுகள் என்ற மாய பீதியில் ஆளாகி விபத்தில் சிக்கி விடக்கூடாது என இக்கிராமத்தில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பயந்துகொண்டு பரிகாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.