Skip to main content

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க உத்தரவு!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

Order to start student admission in government colleges!

 

தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் இன்று (20/08/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் அல்லது ஆஃப் லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும். கலந்தாய்வை ஆகஸ்ட் 23- ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். பிளஸ் 2 சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டையும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது." இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்