Skip to main content

நாங்கள் கேட்டது புதிய பேருந்து நிலையம், திறப்பதோ டாஸ்மாக்!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தையொட்டியே பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் மதுபானகடையை திறக்க கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதனை உடனடியாக தடை செய்ய வேண்டுமென  மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியூ, சிறு விற்பனையாளர்கள் சங்கத்தினர் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் என பொதுமக்களிடம் மதுபான கடைக்கு எதிராக கையெழுத்து பெற்று வருகின்றனர்.



 

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து நிலையம் கேட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர் அப்பகுதி மக்கள். ஆனால் அதற்கு செவிசாய்க்காத அதிமுக அரசு, தற்காலிகமாக உருவாக்கப்பட்ட  புதிய பேருந்து நிலையத்தின் அருகிலேயே டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிக்கிறது.

 

 


அந்த பேருந்து நிலையத்தை சுற்றி ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், மிகப்பெரிய துணிக்கடைகள், மருத்துவமணைகள், மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும்  வழியாக இருக்கும் இடத்தில் இடையூறை ஏற்படுத்தும் விதமாக பேருந்து நிலையத்தை ஒட்டியே அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் வேகமாக நடைப்பெற்றுவருகிறது.

 

 


இதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர், கோட்டாச்சியர்,       வட்டாச்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர். நடவடிக்கை இல்லாத நிலையில் போராட்டங்களை நடத்தவும்  திட்டமிட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.