Skip to main content

ஓ.பி.ஆர். மொரீசியஸ் பயணம்! தங்கத்தமிழ்ச் செல்வன் பகீர் தகவல்!!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

OPR morris's travel DMK thangam thamizhselvan interview

 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. தேர்தல் பணிக்காகவும் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் தேனி மாவட்டத்தை தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்தனர். இதில் தெற்கு மாவட்டத்தில் உள்ள கம்பம், ஆண்டிபட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் மாவட்ட செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணனை நியமிக்கப்பட்டார். அதுபோல் வடக்கு மாவட்டத்தில் உள்ள  போடி, பெரியகுளம்  சட்டமன்றத் தொகுதிகளின்  மாவட்ட செயலாளராக தங்கத்தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டார்.

 

இதனைத் தொடர்ந்து அ.ம.மு.க. உட்பட மாற்றுக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் முன்னிலையில் திமுகவின் இணைந்தனர். 

 

இந்நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கத்தமிழ்ச்செல்வன், “இந்த கரோனா காலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய தி.மு.க. ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். ஆனால் தமிழ் நாட்டில் அ.தி.மு.கவுக்கு இருக்கிற ஒரே பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.எஸ். மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். 

 

இவர் வெற்றி பெற்று ஒரு வருடம் ஆகியும்கூட தொகுதி பக்கம் தலை காட்டவில்லை. இந்த கரோனா காலத்தில்கூட தேனி தொகுதிக்கு எந்த ஒரு உதவியும் செய்து தரவில்லை. ஆனால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக தனி விமானம் மூலம் மொரிசியஸ் மற்றும் மாலத்தீவு நாட்டுக்கு அவர் பயணம் செய்து தற்போது பாரீசில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அவரது இந்த பயணமானது அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் தேர்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாங்கிய பணத்தை பதுக்கி வைக்கதான் தனி விமானத்தில் ஓ.பி.ஆர். சென்றுள்ளார். அவர் மீது மத்திய, மாநில அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும்பாலும் ஊழல் செய்த பணத்தை மாலத்தீவு, மொரீசியஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கிவைக்கத்தான் செல்வார்கள்.” என்று கூறினார். இந்த பேட்டியின்போது மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது