Skip to main content

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான நீச்சல் தொட்டியில் மூதாட்டியின் சடலம்

Published on 02/10/2023 | Edited on 02/10/2023
nn

 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் தோட்டத்தில் உள்ள நீச்சல் தொட்டியில் மூதாட்டி ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ஓலைமான்பட்டியில் தோட்டத்தில் நீச்சல் தொட்டி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தின் வழியே சென்ற 83 வயது மூதாட்டி பாலாயி என்பவர் நடந்து சென்றபொழுது கால் இடறி உள்ளே விழுந்ததாகவும், இதில் மூதாட்டி இறந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்