Skip to main content

’வடசென்னை படத்தில் வந்திருப்பதை  போலவே வடசென்னையில் முரண்பட்ட காட்சிகள்  நடக்கிறது’-தம்பிதுரை பேட்டி

Published on 26/10/2018 | Edited on 26/10/2018

 

tha


வட சென்னை படத்தில் வந்திருப்பதை  போலவே முரண்பட்ட காட்சிகள் வடசென்னையில் நடந்து கொண்டு இருக்கின்றது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் நல்லவர், களங்கமில்லாதவர் எனவும் மக்களைவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


கோவை விமான நிலையத்தில் மங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது, பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரும் மேல்முறையீடு செய்ய போவதாக சொல்லி இருப்பது  தொடர்பான கேள்விக்கு, யார் எங்கு சென்றாலும் தீர்ப்பு ஒன்றாகவே இருக்கும் எனவும், அரசியல் சாசன அடிப்படையில் சபாநாயகர் முடிவெடுத்துள்ளார் எனவும் முறைகேடுகள் வரக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

 

உச்சநீதிமன்றத்திலும் இதே தீர்ப்புதான் அவர்களுக்கு வரும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும்,தேர்தலை எதிர் கொள்ள அதிமுக தயாராகவே இருக்கின்றது எனவும் தெரிவித்தார். 

 

உள்ளாட்ச்சி தேர்தலை நடத்த அதிமுக தயாராகவே இருக்கின்றது என தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது திமுக எனவும், வழக்கு நீதித்துறையில் இருப்பதன் காரணமாக உள்ளாட்சி  தேர்தல் தாமதமாகின்றது எனவும் தெரிவித்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும், தொண்டர்களாக வருந்தி வந்தால்  அவர்களை இணைப்பது குறித்து தலைமை முடிவு எடுக்கும் எனவும் தெரிவித்தார். 

 

நடிகர் தனுஷ் நடித்த வட சென்னை படத்தில் முரண்பட்ட காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது எனவும் அது போலவே  வடசென்னையில்  முரண்பாடான செயல்கள் நடந்து கொண்டு இருக்கின்றது எனவும் தெரிவித்த தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் நல்லவர், களங்கமில்லாதவர் எனவும் தெரிவித்தார். 

 

சபாநாயகர் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க முடியாது எனவும், தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் சபாநாயகருக்கு இதில் தலையிட உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.  பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ வையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதா இல்லையா என்பதை தலைமை முடிவு செய்யும் என தெரிவித்த அவர், தினகரன் சொன்ன ஸ்லிப்பர் செல்கள் எங்கிருக்கின்றது என்றே தெரியவில்லை எனவும்  அவற்றை தேடிப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

 

முல்லை பெரியார் அணை முன்பாக புதிய அணை அமைக்க கூடாது என்பதை மத்திய அரசிடம்   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். நல்ல ஆட்சியை கவிழ்ப்பது சரியல்ல எனவும் அப்படி செய்தால் அம்மாவின் ஆன்மா சும்மா இருக்காது எனவும், தவறு செய்தால் அவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது எனவும் தெரிவித்தார். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக அதை எதிர்கொள்ளும் எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஊழலை ஒழிப்பதே அதிமுகவின் நோக்கம்..” - எம்.பி. தம்பிதுரை 

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

"The aim of ADMK is to eliminate corruption." - MP Thambidurai
கோப்புப் படம்

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு செய்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.

 

இதில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், பூத் கமிட்டி  திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளருமான தம்பிதுரை கலந்துகொண்டு பூத் கமிட்டி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய தம்பிதுரை, “தேர்தல் நேரத்தில் மட்டும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறுகின்றனர். எம்.ஜி.ஆர் வேறு மற்ற நடிகர்கள் வேறு. நடிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் இன்று காணாமல் போய் உள்ளனர் என பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

திமுகவில் கலைஞர் தொடங்கி தற்போது ஸ்டாலின் வரை குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் இன்று காணாமல் போய்விட்டது. திமுக என்ற கட்சியும் விரைவில் காணாமல் போகும். அதிமுகவின் நோக்கம் தமிழகத்தில் குடும்ப ஆட்சியையும், ஊழலையும் ஒழிப்பது மட்டுமே” என்றார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

“மோடிக்கு குடும்பம் இல்லை... செங்கோட்டை தான் வீடு” - கார்கேவுக்கு தம்பிதுரை பதில் 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

"Modi has no family.. Red Fort is his home" - Thambidurai's answer to Kharge

 

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “என்னுடைய இரண்டாவது பிரதமர் பதவிக் காலத்தில் 10வது முறையாக உரையாற்றுகிறேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை அடுத்த ஆண்டு மீண்டும் இதே இடத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் பட்டியலிடுவேன்” என்று தெரிவித்தார். 

 

இதற்கு  காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தலில் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் மக்களின் கைகளில் உள்ளது. மீண்டும் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்று பிரதமர் கூறுவது அவரது ஆணவத்தைக் காட்டுகிறது. அவர் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார். சுதந்திர தின உரையில் கூட எதிர்க்கட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்பவரால் நாட்டை எப்படி கட்டி எழுப்ப முடியும். அடுத்த ஆண்டு அவர் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவார். ஆனால், அதை அவரது வீட்டில் செய்வார்” என்று தெரிவித்தார்.

 

"Modi has no family.. Red Fort is his home" - Thambidurai's answer to Kharge

 

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு பதில் அளித்த அதிமுக எம்.பி தம்பிதுரை, “பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. இந்தியாதான் அவரது குடும்பம். செங்கோட்டைதான் அவரது வீடு. அதனால் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் தான் தேசியக் கொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரியாகத்தான் சொல்லியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.