திராவிடா் கழகம் சாா்பில் நீட் தோ்வு எதிா்ப்பு பரப்புரை பயணம் நாகா்கோவிலில் இருந்து சென்னை வரை நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்து பேசிய திராவிடா் கழகம் தலைவா் கி.வீரமணி,
![The new education policy is punching the students...k.veeramani](http://image.nakkheeran.in/cdn/farfuture/g5pKxTXuV0LRefHXiN_2oeW6yUIVjhGc_36LtwVvlIk/1579692679/sites/default/files/inline-images/tgrutrux-v.jpg)
நீட் தோ்வு மூலம் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவா்கள் வந்து விடக்கூடாது என்பது தான் மத்திய அரசின் திட்டம். இதற்கு முதுகெலும்பு இல்லாத அதிமுக அரசும் இந்த விசயத்தில் இரட்டை வேடம் போட்டு மாணவா்களையும், பெற்றோா்களையும் ஏமாற்றுகிறது.
இதனால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மாணவா்களுக்கு இடம் கிடைக்கவில்லை இதனால்தான் அனிதா போன்ற பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்துள்ளனா். மேலும் புதிய கல்வி கொள்கையில் இட ஒதுக்கீடு என்பதே இல்லை. புதிய கல்வி கொள்கையால் மாணவா்களின் கண்ணை குத்துகிறாா்கள். 5மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பொதுத்தோ்வு என்பது குலகல்வியின் மறு அவதாரம் தான்.
ஜாதி வேறுபாட்டால் தமிழகத்தில் தமிழுக்கும் இடமில்லை தமிழருக்கும் இடமில்லை என்றாா். கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.