Skip to main content

என்னுடைய காதல் தவறு என தெரிந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன் - போலீசாரிடம் அழுத மாணவி

Published on 30/09/2018 | Edited on 30/09/2018
My love is wrong - the crying girl of the police


பஞ்சாப் மாநிலம் அபோகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவருக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெய்கிருஷ்ணன் மனைவி இறந்துவிட்டார். ஓய்வு நேரத்தில் டியூசன் எடுத்து வந்த ஜெய்கிருஷ்ணன் பணியிலிந்து ஓய்வு பெற்ற பின்னரும் டியூசன் எடுத்து வந்துள்ளார். 
 

இவர் கடைசியாக பணியாற்றிய பள்ளியில் மகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி படித்து வந்துள்ளார். அந்த மாணவி இவரிடம் டியூசன் படித்து வந்துள்ளார். பள்ளியில் படிக்கும்போதே அவ்வப்போது இந்த மாணவியின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து வந்ததுடன், பிரியமாக இருப்பதாக கூறி மாணவிக்கு பல உதவிகளை செய்துள்ளார்.
 

பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்த பின்னரும் மகா, ஜெய்கிருஷ்ணனிடம் டியூசன் படித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் திடீரென மாயமாகிவிட்டனர். டியூசனுக்கு சென்ற மகள் திரும்பவில்லை என்று மகாவின் தந்தை பல இடங்களில் விசாரித்துள்ளார். அப்போதுதான் தலைமை ஆசிரியரும் மாயமானது குறித்து தெரிய வந்தது.
 

இதுகுறித்து மகாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரில் தனது மகளை, ஜெய்கிருஷ்ணன்தான் கடத்தி சென்றுள்ளார் என்று தெரிவித்திருக்கிறார். மகா தந்தையின் புகாரை ஏற்ற போலீசார் இருவரையும் தேடி வந்ததுடன், அனைத்து காவல்நிலயைத்திற்கும் தகவல் அனுப்பினர். 
 

இந்த நிலையில் பஞ்சாப் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது இவர்கள் இருவரும், ராமேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பது தெரியவந்தது. மேலும் பஞ்சாப் போலீசார் ராமேஸ்வரம் போலீசாருக்கு இருவரின் பெயர்கள், அடையாளங்களை சொல்லி அவர்களை விசாரிக்க சொல்லியுள்ளனர். ராமேஸ்வரத்தில் வெளியே சுற்றித்திரிந்த இவர்களை பார்த்த சிலர், அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளனர். 
 

இதையடுத்து ராமேசுவரம் போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,  தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்துள்ளது தெரிய வந்தது. 
 

பஞ்சாப் போலீசாரும் மகா பெற்றோருடன் ராமேஸ்வரம் வந்தடைந்தனர். அப்போது மகா பெற்றோர் முன்பு பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் மகா சொன்ன விசயம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தானும், ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாக மகா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு மகா பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறினர்.
 
உடல் சுகத்துக்காக நான் மகத்தை திருமணம் செய்யவில்லை. மனைவியை இழந்த என் மீது மகா அளவு கடந்த பாசம் வைத்துள்ளாள் என்பதுதான் காதலுக்கான காரணம் என ஜெய்கிருஷ்ணன் தெரிவித்தார்.

எங்களை பஞ்சாப்புக்கு அனுப்பினால் இருவரது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. சிறு வயதில் இருந்தே என் மீது அவர் காட்டிய அக்கறைதான் ஜெய்கிருஷ்ணன் மீது மதிப்பை ஏற்படுத்தியது. நாளடைவில் என்னை அறியாமலேயே அவர் மீது அளவற்ற பாசம் வைத்துவிட்டேன். என்னுடைய காதல் தவறு என தெரிந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன். என் வாழ்க்கை அவரோடுதான். பஞ்சாப்புக்கு நாங்கள் போக விரும்பவில்லை. நான் மேஜர் என்பதால் யாருடன் வாழ வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை எனக்கு உள்ளது என்று மகா கதறி அழுது கெஞ்சி இருக்கிறார். பொருந்தாத இந்த காதல் பற்றி பஞ்சாப் மற்றும் ராமேசுவரம் போலீசார் எடுத்துக்கூறியும் அதை மகத் பொருட்டாகவே கருதவில்லை.

இருவரையும் ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்கள் இருவரையும் பஞ்சாப் போலீசாருடன் அனுப்பி வைத்தனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.