கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பரங்கிமலை ரயில்வே ட்ராக்கில் ஒரு தலை காதல் பிரச்சனையில் காதலனால் தள்ளிவிடப்பட்ட சத்யஸ்ரீ என்ற கல்லூரி மாணவி ரயில்வே டிராக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரி மாணவி சத்யஸ்ரீயின் உயிரிழப்பைத் தாங்க முடியாத அவரது தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
மாணவியை ரயில்வே ட்ராக்கில் தள்ளிவிட்ட சதீஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கை சிபிசிஐடி நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் அவரது தந்தை மாணிக்கமும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாயார் ராமலட்சுமியும் உயிரிழந்துள்ளார். ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல்நிலைய குற்றப்பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. சத்யஸ்ரீயின் தாயும் தற்போது உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.