Skip to main content

மேலும் என்னென்ன தளர்வுகள்?- முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

tamilnadu cm palanisamy discussion with doctors team and district collectors

 

தமிழகத்தில் நாளையுடன் (30/09/2020) 8- ஆம் கட்ட ஊரடங்கு, முடிவடையும் நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (29/09/2020) ஆலோசனை நடத்துகிறார்.

 

ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது பற்றி மருத்துவ நிபுணர் குழுவுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசிப்பதற்கு முன்னர், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் முதல்வர் ஆலோசிக்கிறார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர், அமைச்சர்கள், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

தியேட்டர்கள், பள்ளி- கல்லூரிகள் திறப்பு, புறநகர் ரயில்- தனியார் பேருந்து சேவை பற்றி முதல்வர் முடிவெடுக்கிறார்.

 

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24- ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து, தனியார் பேருந்து சேவை மட்டுமே தற்போது முழுமையாக இயங்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்