Skip to main content

வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Money Laundering for getting job in forest department

ஈரோடு கொங்கம்பாளையம் நஞ்சப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த கோகுல்(27) மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவர்கள் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நானும் எனது நண்பரும் வேலை தேடிக் கொண்டிருந்தபோது ஈரோடு தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகரும், சூளை மல்லிகை நகரைச் சேர்ந்த ஒருவரும் எங்களுக்கு வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நம்ப வைத்தனர்.

அதனை நம்பி நாங்கள் பல தவணைகளாக அவர்களிடம் மொத்தம் ரூ.3 லட்சத்து 91 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தினர். நாங்கள் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் சரியான பதில் வரவில்லை. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி எனது தந்தை இறந்துவிட்டார். அதற்கு அடுத்த மாதம் அவர்கள் ஒரு லட்சம் பணம் தந்தனர். பின்னர் ஜூன் மாதம் அவர்கள் ரூ. 30,000 தந்தனர். அதன் பின்பு மீதி தொகையான ரூ. 2 லட்சத்து 61 ஆயிரம் பணம் தராமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வருகின்றனர்.  

இந்நிலையில் மீண்டும் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டபோது, அவர்கள் பணத்தை திருப்பி தர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறி மிரட்டல் விடுக்கின்றனர். எனது தாயின் நகையை அடமானம் வைத்து அவர்களிடம் பணத்தைக் கொடுத்துள்ளேன். பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய அவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வரவேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான் என்பவர் தனது கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.