குமரியில் 600 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில் ஐம்பொன் சிலை மற்றும் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பிரசித்த பெற்ற முக்கியமான பழமைவாய்ந்த சிவன் கோவில்களில் ஓன்றான திக்குறிச்சி மகாதேவா் கோவில் சிவாலயம் ஒடும் பக்தா்கள் செல்ல கூடிய இரண்டாவது கோவில் ஆகும்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகிறார்கள். அதேபோல் சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் அதிகம் பேர் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலுக்கு வரும் வருமானத்தில் அக்கறை காட்டும் அறநிலையத்துறை, கோவிலை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை என பக்தா்கள் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் கோவிலுக்கு பூஜை செய்ய போன பூஜாரி கோவில் நடை திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்க்கும் போது அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலையையும் தங்க நகைகளையும் காணவில்லை. மா்ம ஆசாமிகள் அதையெல்லாம் திருடி சென்று வி்ட்டனர்.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளின் புகாரையடுத்து தக்கலை காவல் துணை கண்காணிப்பாளா் கார்த்திகேயன் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
600 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில் பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை மற்றும் நகைகள் கொள்ளை!
சார்ந்த செய்திகள்
Next Story
கிரண் ராவுடன் தொடர்புடைய 7 பேருக்கு சம்மன்...
தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் வீடு, பண்ணைவீடு ஆகியவற்றில் கடந்த வாரங்களில் சிலைக்கடத்தல் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல சாமி சிலைகள், தூண்கள் ஆகியவை கிடத்தன. அதைத்தொடர்ந்து அவர் தோழியான கிரண் ராவ் வீட்டில் சோதனை நடந்தது. அங்கும் பல சிலைகளும், தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது கிரண்ராவின் நிறுவன மேலாளர் தயாநிதி உட்பட 7 பேருக்கு சிலைக்கடத்தல் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
Next Story
சிலை கடத்தலில் பிரபல தாதாக்கள்!
பழனி முருகன் சிலை மோசடியைக் கண்டுபிடித்த பிறகு, அதே பழனிக்குச் சென்று மொட்டை போட்டார் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல். சாமி சிலை கடத்தல் வழக்கைத் தோண்டத் தோண்ட பூதங்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. இப்போது லேட்டஸ்டாக கிளம்பியிருக்கும் பூதம் ரன்வீர் ஷா. சிலை கடத்தலில் மூளையான தீனதயாளனின் திக் ஃப்ரண்டான ரன்வீர்ஷா, சென்னை -கிண்டியில் பி.எஸ். அப்பாரெல்ஸ் என்னும் பெயரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதோடு சிலைகளை வாங்கி விற்கும் வேலையும் செய்கிறார்.
2016-ல் ரன்வீர்ஷா வீட்டில் சோதனை நடத்தி சில சிலைகளைக் கைப்பற்றியபோது, அதற்கு முறையான ஆவணங்கள் இருப்பதாக கூறியதால் அப்போது தப்பித்தார் ஷா. ஆனால் ஷா மீது ஒரு கண் வைத்தபடியே இருந்த பொன்.மாணிக்கவேல், கோர்ட் அனுமதி யுடன் கடந்த வியாழனன்று சோதனை நடத்தியதில் 89 சிலைகளை மீட்டு கும்பகோணத்திற்கு அனுப்பி யுள்ளார். இது குறித்து ஷாவின் வக்கீல் தங்கராசுவிடம் கேட்டபோது, ""சிலைகளை வாங்குவதற்கு லைசென்ஸ் இருக்கு, விற்பதற்கு இல்லை. ரன்வீர் ஷா தலைமறைவாகவும் இல்லை'' என்றார். ரன்வீர் ஷாவை மிரட்டிப் பணம் பறித்த பிரபல ரவுடி சி.டி.மணிக்கும் சிலை கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்பதை போலீஸ் மோப்பம் பிடித்துவிட்டதால், ரன்வீர் ஷா எஸ்கேப்பாகி விட்டார்.