Published on 09/11/2020 | Edited on 09/11/2020
![medical seats madurai high court branch](http://image.nakkheeran.in/cdn/farfuture/Mp0yRbw5zj8599pa9jSftGxkXn9rUlpUn7A5XM3HgEI/1604920671/sites/default/files/inline-images/madura%20%281%29_16.jpg)
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி நெல்லையைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (09/11/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த எத்தனை மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர்ந்துள்ளனர்? என்பதை கூடுதல் மனுவாகத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 20- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.