Skip to main content

நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்?- ப.சிதம்பரம்!

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

மேலப்பாளையத்தில் நடந்த முஸ்லிம் அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
 

nellai kannan arrested former union ministers p chidambaram tweet


இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில், பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம், நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்? பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?   


பேசுவதே குற்றம் என நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். பூங்காவில் பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும் என்று ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்