Skip to main content

தெரு மற்றும் வெறிநாய்களை பிடித்து திருச்சி மாநகராட்சிக்குள் விடுவோம் – நாய் வேஷம் போட்டு எச்சரிக்கை!

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமீபகாலமாக  தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் அதிகரிப்பினால் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியின் முக்கிய வீதியான நத்தர்ஷா பள்ளி வாசல் அருகே 10 வயது சிறுமியை நாய் கடித்து குதறியது. .இதே போல காமராஜர் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 15க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இப்படி அடிக்கடி பொதுமக்களுக்கு தெருநாய்களினால் பிரச்சனை ஏற்படுவது குறித்து திருச்சி மாநகராட்சிக்கு பலமுறை பல்வேறு அமைப்பினர்களும் புகார் கொடுத்துக்கொண்டே வருகிறனர்.

 

protest

 

ஆனால் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் ஸ்மார்சிட்டி திட்டத்தின் கீழ் பணி செய்கிறோம் என்று சொல்லி அலுவலகளில் யாரும் இருப்பதில்லை என்பது பரவலான குற்றசாட்டு இந்த நிலையில் எத்தனையோ முறை மனு கொடுத்தும் இது குறித்து அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாய் வேஷம் அணிந்து திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட வந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருச்சி கண்டோன்மென் போலிஸ் மனிதநேயமக்கள் கட்சியினர் உடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

 

 

 

அப்போது தெருநாய்களையும். வெறிநாய்களை கட்டுப்படுத்த தவறிய திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த தெருநாய், வெறி நாய்களின் பிரச்சனை குறித்து பேசிய கட்சியின் மாவட்ட தலைவர் ரபீக், இந்த தெருநாய், வெறிநாய் பிரச்சனையில் பொதுமக்களுக்கு தெருக்களில் செல்வதற்கு பெரிய பய உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதை உடனடியாக பிடிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை இதை நிறைவேற்ற தவறினால் அறிவிக்கப்படாத ஒரு நாளில் தீடீர் என 50க்கு மேற்பட்ட தெருநாய்களை பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்குள் விடும் போராட்டம் நடத்திவிடுவோம் என்றார் கடுமையாக. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .